Close Menu
    What's Hot

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” – மதுரையில் அன்புமணி பேட்டி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»பாகிஸ்தான் தீவிரவாதிகள் பீகாரில் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை
    இந்தியா

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் பீகாரில் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksAugust 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 12 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மூன்று பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பீகார் மாநிலத்தில் அக்டோபர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாக கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் பீகார் காவல்துறைக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். அதில் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் நேபால் வழியாக பிகருக்குள் ஊடுருவி உள்ளதாக கூறியுள்ளனர்.

    பாகிஸ்தானின் ராவல்பிண்டி , உமார்கோட் , பஹாவல்பூரை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் கடந்த வாரம் பிகாருக்குள் நுழைந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் நேபாள் தலைநகர் காத்மாண்டு வழியாக பிகாருக்குள் நுழைந்துள்ளதாக எச்சரிக்கை கொடுத்துள்ளனர். இந்த எச்சரிக்கையை அடுத்து பிகார் காவல்துறை உச்சகட்ட அவசர நிலையை பிகார் மாநிலத்தில் பிறப்பித்துள்ளது. சமீப மாதங்களுக்கு முன்னர் ஜம்மு & காஷ்மீரின் பகல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளினுடைய முகாம்கள் மற்றும் தளங்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த இருந்தனர்.

    இதில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர். இது நடந்த சில மாதங்களுக்கு பிறகு பாகிஸ்தானை சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் உளவுத்துறை வழங்கியுள்ள தகவலின் படி பீகார் மாநிலத்தில் அம் மாநில காவல்துறை தீவிரமான தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கூறுகிறது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெந்தில்பாலாஜி சகோதரர் வெளிநாடு செல்ல அனுமதி
    Next Article கூலி படத்திற்கு U/A சான்றிதழ் கோரிய மனு தள்ளுபடி
    Editor TN Talks

    Related Posts

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    December 27, 2025

    வங்கதேச வன்முறையில் கபட நாடகம்: சினிமா பிரபலங்கள் ஜான்வி கபூர், காஜல் அகர்வால் கருத்து

    December 27, 2025

    பார்லி.,க்குள் ‘எலக்ட்ரானிக்’ உபகரணங்கள் கொண்டு வர எம்.பி.,க்களுக்கு தடை

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    “ஜென் இசட், ஆல்பா தலைமுறை நாட்டை வழிநடத்தும்” – பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

    “சமூக நீதி குறித்து பேசுவதற்கு திமுகவுக்கு தகுதியில்லை” – மதுரையில் அன்புமணி பேட்டி

    ஆண்கள் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை!. முதல் இந்திய வீராங்கனை!. வரலாறு படைத்த தீப்தி சர்மா!. 

    வங்கதேச வன்முறையில் கபட நாடகம்: சினிமா பிரபலங்கள் ஜான்வி கபூர், காஜல் அகர்வால் கருத்து

    Trending Posts

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    திமுக அரசின் சாதனைகளில் 5%- ஆவது அதிமுக ஆட்சியில் நடந்ததா?. முதல்வர் ஸ்டாலின் சேலஞ்ச்!

    December 26, 2025

    கனவில் கத்தும்போது உங்களுக்கு சத்தம் கேட்பதில்லையா?. அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.