Close Menu
    What's Hot

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை… அது அவர்களின் வேலையும் அல்ல…
    இந்தியா

    இந்தியர் யார் என்பதை நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை… அது அவர்களின் வேலையும் அல்ல…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025Updated:August 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உண்மையான இந்தியர் யார் என நீதிமன்றம் தீர்மானிப்பதில்லை எனவும், அது அவர்களின் வேலை இல்லை எனவும் பிரியங்கா காந்தி எம்.பி., கூறியுள்ளார்.

    நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்ரா நிகழ்ச்சியில், எல்லையில் சீனப்படைகளுடனான மோதல் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் இந்திய ராணுவம் பற்றி தரம் தாழ்ந்து பேசியதாக உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா என்பவர் லக்னோ நீதிமன்றத்தில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில், ராகுல்காந்திக்கு லக்னோ கோர்ட்டு சம்மன் அனுப்பியது. சம்மன் உத்தரவையும், புகாரையும் ரத்து செய்யக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ராகுல்காந்தி மனுவை தள்ளுபடி செய்தது. அந்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இந்த மனு, நீதிபதிகள் திபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, 2 ஆயிரம் சதுர கி.மீ. இந்திய பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டதாக உங்களுக்கு (ராகுல்காந்தி) எப்படி தெரியும்? நீங்கள் அங்கு இருந்தீர்களா? உங்களிடம் நம்பகமான ஆதாரம் இருக்கிறதா?. எந்த ஆதாரமும் இல்லாமல் ஏன் இப்படிப்பட்ட கருத்துகளை பேசுகிறீர்கள்? நீங்கள் உண்மையான இந்தியராக இருந்தால், இதுபோன்று பேச மாட்டீர்கள். நீங்கள் எதிர்க்கட்சி தலைவர். இதை ஏன் நீங்கள் நாடாளுமன்றத்தில் சொல்லவில்லை?. சமூக வலைத்தளங்களில் ஏன் சொல்கிறீர்கள்? என்று நீதிபதிகள் கடிந்து கொண்டனர்.

    இதற்கு பதில் தெரிவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி, உண்மையான இந்தியர் யார்? என்பதை நீமன்றம் தீர்மானிப்பதில்லை; அது நீதிபதிகளின் வேலை அல்ல. என் சகோதரர் (ராகுல்காந்தி) ஒருபோதும் ராணுவத்திற்கு எதிராக செயல்படமாட்டார். நமது ராணுவம், ராணுவ வீரர்கள் மீது உயர்ந்த மரியாதை வைத்துள்ளார். எனவே, இது ஒரு தவறான கருத்து.

    அரசாங்கத்தை கேள்வி கேட்பது எதிர்க்கட்சி தலைவரின் கடமை; அதைத்தான் அவர் செய்கிறார்.இது மத்திய அரசுக்கு பிடிக்கவில்லை; அவருக்கு பதிலளிக்க மத்திய அரசு விரும்பவில்லை; அதனால்தான் இந்த தந்திரங்களையெல்லாம் பயன்படுத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நடத்தக்கூட முடியாத அளவுக்கு மத்திய அரசு பலவீனமாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவங்கி கடன் முறைகேடு வழக்கு… அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் அம்பானி…
    Next Article இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி… தொடரை சமன் செய்த இந்திய அணி… சச்சின் பாராட்டு…
    Editor TN Talks

    Related Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!.

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.