மேற்காசியா மற்றும் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றமான சூழலில், அங்கு வசிக்கும் சுமார் ஒரு கோடி இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரத்யேகக் கட்டுப்பாட்டு மையம் (Special Control Room) அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் தினமும் காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மற்றும் அவர்களின் கவலைகளுக்குத் தீர்வு காண்பதே இந்த மையத்தின் முக்கிய நோக்கமாகும்.

உதவி எண்கள் மற்றும் தொடர்பு விவரங்கள்: பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தை கீழ்க்கண்ட எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்:

இலவச அழைப்பு எண் (Toll Free): 1800-11-8797

தொலைபேசி எண்கள்: +91-11-23012113, +91-11-23014104, +91-11-23017905

வாட்ஸ்அப் எண்: +91-9968291988

மின்னஞ்சல்: situationroom@mea.gov.in

தூதரகங்களின் அவசர உதவி எண்கள்: மேற்காசிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களும் 24 மணிநேர அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளன. போர் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் உள்ள முக்கிய எண்கள் இதோ:

இஸ்ரேல்: +972 54 7520711, +972 54 2428378

ஈரான்: +98 9128109115, +98 932179359

ஐக்கிய அரபு அமீரகம் (UAE): 800-46342 (இலவச எண்), +971 543090571 (WhatsApp)

சவுதி அரேபியா (ரியாத்): +966 11 4884697, 800 247 1234 (இலவச எண்)

லெபனான்: +961 76860128

பாலஸ்தீனம் (ராமல்லா): +970 592916418

அங்குள்ள இந்தியர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதைத் தவிர்க்குமாறும், அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version