உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், படுக்கையறையின், டபுள் படுக்கையின் கீழே இருந்த அண்டர் கிரவுண்டில் போலீசார் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மீரட் போலீசாருக்கு அங்குள்ள ஒரு வீட்டில் ரகசியமாக ஆயுத தொழிற்சாலை செயல்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சோதனை நடத்திய போலீசார் அங்கு படுக்கையறையில் இருந்த டபுள் படுக்கையை நகர்த்தியபோது, அதன் கீழே ரகசிய அறை இருந்ததைக் கண்டுபிடித்தனர். உடனடியாக, அந்த அறைக்குள் சென்ற போலீசார், அங்கு ஆயுதங்கள் செய்யப் பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்ததோடு, தயாரிக்கப்பட்ட பல கருவிகளையும் கைப்பற்றினர்.
இது தொடர்பாக இந்த சம்பவ இடத்திலேயே 11 பேரை கைது செய்த போலீசார், மேலும் 10 பேரை தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம், இதுவரை இந்த ஆயுதங்களை யாருக்கு விற்றுள்ளனர் என்பதை கண்டறிய போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
