நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது.

இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க ஏப்​.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளு​மன்​றக் கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, அசாம், கேரளா, புதுச்​சேரி ஆகிய​ மாநில சட்டப்பேர​வைத் தேர்​தல்​களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் மற்​றும் தொகுதி மறு வரையறை தொடர்​பான மசோ​தாக்​களை நிறைவேற்​று​வதற்​காக மத்​திய அரசு நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத்​தை கூட்டி உள்​ள​தாக காங்​கிரஸ் குற்​றம்​சாட்டி உள்​ளது.

இதுதொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக ஏப்​.15-ம் தேதி காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆலோ​சனை நடத்​தவுள்​ளன. டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மசோ​தா​வில் திருத்​தம் கொண்டு வரப்பட வேண்​டும் என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை விடுத்​துள்​ளன.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த அனைத்து கட்சிகளின் அவை தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விரிவான விவாதங்களுக்கு பின்னர், நாடு முழுவதும் உண்மையான மனவுறுதியுடன் நாரி சக்தி வந்தன் அதினீயம் அமல்படுத்தப்பட வேண்டிய தருணம் வந்துள்ளது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்த வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

பெண்கள் மற்றும் வருங்கால தலைமுறையினக்காக பொறுப்புணர்வுடன் கட்சிகள் நடந்து கொண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

இந்தநிலையில், தங்களை கலந்தாலோசிக்காமல் பார்லிமென்ட் கூட்டத்தை பாஜக அரசு கூட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய அவசர கடிதத்தில், 5 மாநில தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் ஆதாயத்திற்காகவே மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏப்.29-க்கு பிறகு தொகுதி மறுவரை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version