Close Menu
    What's Hot

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    தேர்தல் பரபரப்பு!. தமிழகம் வந்தார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»“நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!
    உலகம்

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    Editor web3By Editor web3February 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Trump on Op Sindoor
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய அணு ஆயுதப் போரைத் தான் தடுத்து நிறுத்தியதாகக் கூறி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

    கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ‘ஆபரேஷன் சிந்துார்’  காரணமாகக் கடுமையான போர் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்குச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின.

    இதுவரை இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் கூறிவருகிறார். அந்தவகையில், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ‘ஸ்டேட் ஆஃப் தி யூனியன்’ ( உரையில், “நான் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், இந்தப் போரில் சுமார் 3.5 கோடி  மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

    இரு நாடுகளும் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராக இருந்ததாகவும், தனது தனிப்பட்ட முயற்சியால்தான் ஒரு மிகப்பெரிய உலகப் பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    போரை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், இரு நாடுகளின் மீதும் 200 சதவீத வரி  விதிப்பேன் என்று தான் மிரட்டியதாகவும், அந்தப் பொருளாதார அச்சமே இரு நாடுகளையும் பின்வாங்கச் செய்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

    அதிபர் ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை இந்தியத் தரப்பு ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளது. “போர் நிறுத்தம் என்பது அண்டை நாடுகளுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் எடுக்கப்பட்ட முடிவே தவிர, இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக்கோப்பை 2026!. வரலாறு படைத்த ஹாரி ப்ரூக்! பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற இங்கிலாந்து!
    Next Article 2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026

    தேர்தல் பரபரப்பு!. தமிழகம் வந்தார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!. 

    February 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    தேர்தல் பரபரப்பு!. தமிழகம் வந்தார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!. 

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    “நான் மட்டும் இல்லையென்றால் 3.5 கோடி பேர் இறந்திருப்பார்கள்!. டிரம்ப் பரபரப்பு தகவல்!

    Trending Posts

    2 மாத குழந்தையை அடுப்பில் போட்டு கொன்ற கொடூர தாய்!. தெலங்கானாவில் அதிர்ச்சி!

    February 25, 2026

    காணாமல் போகும் மீனவர் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000!. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!.

    February 25, 2026

    தள்ளிப்போகிறதா தேர்தல்?. சென்னை வந்த தேர்தல் ஆணைய குழுவின் பிளான் என்ன?

    February 25, 2026

    தேர்தல் பரபரப்பு!. தமிழகம் வந்தார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்!. 

    February 25, 2026

    டி20 உலகக்கோப்பை 2026!. வரலாறு படைத்த ஹாரி ப்ரூக்! பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்ற இங்கிலாந்து!

    February 25, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.