800 பில்லியன் டாலருக்கும்(சுமார் 71 லட்சம் கோடி) அதிகமான நிகர சொத்து மதிப்பை அடைந்துள்ள கோடீஸ்வரர் எலான் மஸ்க், பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்ற உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் 800 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பை எட்டிய உலகின் முதல் நபர் எலான் மஸ்க் ஆவார். இந்தநிலையில், எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
மக்கள் நினைப்பதை விட இதில் அதிக உண்மை இருக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளார். “யார் ‘பணத்தால் மகிழ்ச்சியை வாங்க முடியாது’ என்று சொன்னார்களோ, அவர்களுக்கு உண்மையில் என்ன சொல்கிறோம் என்பது தெரிந்தே இருந்திருக்கிறது” என்று மஸ்க் பதிவிட்டு, ஒரு சோகமான எமோஜியை சேர்த்து பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகள், ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கருத்துகளை பெற்றுள்ளது.
பலரும் மஸ்கின் மனநிலையைப் பற்றி விவாதித்து வருகின்றனர்; சிலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள், மற்றவர்கள் விமர்சனமாக கருத்து தெரிவித்துள்ளனர். “பணம் இல்லாததே எனக்கு அதிக கவலை தருகிறது” என்று ஒருவர் கருத்து தெரிவித்தார். “பணம் மகிழ்ச்சியை உறுதி செய்யாது என்பது உண்மைதான். ஆனால் பணம் இல்லாத நிலை, பலர் வெளிப்படையாக பேசாத அளவுக்கு மனதை வதைக்கும். பில்கள், பொறுப்புகள், சமூக எதிர்பார்ப்புகள் , இவை எல்லாம் மெதுவாக ஒருவரின் மகிழ்ச்சியை கவர்ந்து விடுகின்றன.
நீங்கள் சிரிக்கலாம், சிரித்துப் பேசலாம், நன்றி உணர்வுடன் வாழலாம். ஆனால் வாழ்க்கையைத் தாங்கிக்கொள்வதற்கான போராட்டம் இல்லாமல் இருக்கும்போது கிடைக்கும் மனஅமைதி முற்றிலும் வேறுபட்டது.”
மற்றொரு பயனர், “ஆமாம், அது உண்மைதான்! பணம் எல்லாம் ஒன்றுமில்லை. பணத்தால் உணவை வாங்க முடியும், பசியை வாங்க முடியாது! பணத்தால் ஒரு படுக்கையை வாங்க முடியும், ஆனால் தூக்கத்தை வாங்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
