ரஷ்யப் பெண்களுடன் பாலியல் உறவு கொண்ட பிறகு பில் கேட்ஸுக்கு பாலியல் நோய் தொற்றியது என்று எப்ஸ்டீன் கோப்புகள் கூறுகின்றன. துணை அட்டர்னி என்று சமீபத்தில் வெளியான எப்ஸ்டீனின் ஆவணங்களில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க நீதித்துறை (US Justice Department) வெள்ளிக்கிழமை, நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான தனது விசாரணைக்கு சம்பந்தப்பட்ட பெரிய அளவிலான ஆவணங்களை வெளியிட்டது. இதனால், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து முன்பு எழுந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அவற்றில், அவரைச் சுற்றி கூறப்பட்டதாக சொல்லப்படும் ஒரு பாலியல் தொற்று நோய் (sexually transmitted disease) குறித்த குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
துணை அட்டார்னி ஜெனரல் டாட் பிளாஞ்ச் கூறியதாவது, நீதித்துறை மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பக்க ஆவணங்களையும், 2,000-க்கும் மேற்பட்ட காணொளிகளையும் மற்றும் 180,000 படங்களையும் வெளியிடுவதாகக் கூறினார். . நீதித்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்தக் கோப்புகளில், டிசம்பரில் நடந்த முதல் வெளியீட்டில் இருந்து அதிகாரிகள் நிறுத்தி வைத்திருந்த பல மில்லியன் பக்கங்களில் சிலவும் அடங்கும் என்று அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட இந்த ஆவணங்கள், “அமெரிக்க மக்களுக்கு வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆவண அடையாளம் காணுதல் மற்றும் ஆய்வு செயல்முறையின் முடிவைக் குறிக்கிறது” என்று பிளான்ச் கூறினார். 1,000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர்களின் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியமே இந்த தாமதத்திற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதியதாக வெளியிடப்பட்ட ஆவணங்களில், ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கருதப்படும் சில வரைவு மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து குறிப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மின்னஞ்சல்களில், “ரஷ்ய பெண்கள்” என குறிப்பிடப்பட்ட சில பெண்களுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் பாலியல் தொடர்புகளுக்குப் பிறகு, ஒரு பாலியல் தொற்று நோய் (STD) தொடர்பான தகவலை தனது மனைவி மெலிந்தா பிரெஞ்ச் கேட்ஸிடம் இருந்து மறைக்க பில் கேட்ஸ் முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பில் கேட்ஸின் நீண்ட கால அறிவியல் ஆலோசகரான போரிஸ் நிக்கோலிக் பெயரில் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றும் ஒரு வரைவு அறிக்கையில், இந்தக் கூறுகைகளை ஜெஃப்ரி எப்ஸ்டீன் பதிவு செய்திருப்பதாக தெரிய வருகிறது.
அந்த வரைவில், “ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்டதாகக் கூறப்படும் பாலியல் உறவுகளின் பின்விளைவுகளை சமாளிக்க” பில் கேட்ஸுக்கு மருந்துகள் வாங்க உதவியது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த மின்னஞ்சலில் கூறப்படுவதாவது, “நெறிமுறைக்கு முரணானதும், ஒழுக்க ரீதியாக தவறானதுமான பல செயல்களில் நான் ஈடுபடச் சொல்லப்பட்டேன்; அதற்கு நான் தவறாக சம்மதித்துவிட்டேன். சில நேரங்களில், சட்ட வரம்பை நெருங்கும் அல்லது அதை மீறும் காரியங்களையும் செய்யுமாறு மீண்டும் மீண்டும் என்னிடம் கோரப்பட்டது. ‘ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்ட பாலியல் உறவுகளின் விளைவுகளை சமாளிக்க’ பில் கேட்ஸுக்கு மருந்துகள் வாங்க உதவியது, திருமணமான பெண்களுடன் அவர் மேற்கொண்ட ரகசிய சந்திப்புகளை ஏற்பாடு செய்தது, மேலும் பிரிட்ஜ் போட்டிகளுக்காக அடெரால் (Adderall) மருந்து வழங்குமாறு கேட்டது போன்றவை அதில் அடங்கும்.
என் நண்பர்களுக்கும், எதிர்கால சக பணியாளர்களுக்கும் உண்மையை சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நினைக்கிறேன். அதனால், என் நெறி தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டுக் கொண்டு, என் வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன்.”
பில் கேட்ஸுக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு தனிப்பட்ட வரைவு மின்னஞ்சலில், போரிஸ் நிக்கோலிக் பெயரில் எழுதியதாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் மீண்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வரைவில், தனது பொது பிம்பத்தைப் பாதுகாக்க ஒரு “மூடிமறைப்பை” அரங்கேற்ற பில்லியனர் கேட்ஸ் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மனைவி மெலிண்டாவுக்குத் தெரியாமல் கொடுப்பதற்காக கேட்ஸ் ஆண்டிபயாடிக் மருந்துகளைக் கேட்டதாகவும், பாலியல் ரீதியாகப் பரவும் நோய் (STD) பற்றிக் குறிப்பிடும் மின்னஞ்சல்களை நீக்குமாறு வற்புறுத்தியதாகவும் அந்த வரைவு அறிக்கை கூறுகிறது.
அந்த வரைவு ஆவணத்தில்,“உங்கள் பாலியல் தொற்று நோய் (STD) குறித்து உள்ள மின்னஞ்சல்களை தயவுசெய்து அழிக்குமாறு நீங்கள் என்னிடம் கெஞ்சினீர்கள். மேலும், மெலிந்தாவுக்கு தெரியாமல் அவருக்கு கொடுக்கக்கூடிய வகையில் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நான் உங்களுக்கு வழங்க வேண்டும் என்றும் நீங்கள் கேட்டதாக இதில் கூறப்பட்டுள்ளது…”
அந்த வரைவு ஆவணம் மேலும் தொடர்ந்து, மெலிண்டா பகிரங்கமாக விவாகரத்து கோரினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அந்த வரைவு எச்சரிக்கிறது. இது ஒரு நன்கொடைத் திட்டத்தை பில்லியன் கணக்கான டாலர்களுக்குப் பாதிக்கும் என்று அது கூறுகிறது. “நீங்கள் சொன்னது போல் மெலிண்டா பகிரங்கமாக விவாகரத்து கோர முடிவு செய்தால், நன்கொடைத் திட்டத்திற்கு ஏற்படும் பாதிப்பு மட்டுமே பில்லியன் கணக்கான டாலர்கள் சமூக நன்மைக்குப் பயன்படுத்தப்படாமல் போவதற்கு வழிவகுக்கும் என்று நான் கவலைப்படுகிறேன். ஏனெனில் சில மனைவிகளும் கணவர்களும் தங்கள் வாக்குறுதிகளிலிருந்து பின்வாங்கத் தயங்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.”
வெளியிடப்பட்ட ஆவணங்கள், 2017ஆம் ஆண்டில் வெளியான பழைய செய்திகளையும் மீண்டும் முன்வைக்கின்றன. அதில், ரஷ்யாவைச் சேர்ந்த பிரிட்ஜ் வீராங்கனை மிலா அண்டோனோவாவுடன் பில் கேட்ஸ் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதாக ஜெஃப்ரி எப்ஸ்டீன் மிரட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய அறிக்கைகளின்படி, ஜே.பி. மோர்கன் சேஸ் நிறுவனத்துடன் இணைந்து எப்ஸ்டீன் தொடங்கிய ஒரு தொண்டு நிதியில் பில் கேட்ஸ் பங்கேற்க மறுத்ததையடுத்து, இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கேட்ஸ் தரப்பு செய்தித் தொடர்பாளர், அந்த ஆவணங்களில் உள்ள குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து, அவை “முற்றிலும் அபத்தமானவை மற்றும் முற்றிலும் பொய்யானவை” என்று கூறினார்.
“இந்த ஆவணங்கள் நிரூபிக்கும் ஒரே விஷயம், கேட்ஸுடன் தனக்கு ஒரு தொடர்ச்சியான உறவு இல்லை என்பதால் எப்ஸ்டீனுக்கு ஏற்பட்ட விரக்தியும், அவரைச் சிக்க வைப்பதற்கும் அவதூறு செய்வதற்கும் அவர் எந்த எல்லைக்குச் செல்வார் என்பதும்தான்,” என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முன்னதாக வெளியிடப்பட்ட ஆவணங்கள், பில் கேட்ஸ் போன்ற வணிகத் தலைவர்கள், திரைப்படத் தயாரிப்பாளர் வுடி ஆலன் போன்ற பிரபலங்கள், கல்வியாளர்கள் மற்றும் டொனால்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் உள்ளிட்ட அரசியல்வாதிகளுடன் எப்ஸ்டீனுக்கு இருந்த தொடர்புகளை வெளிப்படுத்தியுள்ளன.
பில் கேட்ஸும் மெலிந்தா பிரெஞ்ச் கேட்ஸும் 1994 முதல் 2021 வரை திருமண வாழ்க்கையில் இருந்தனர். முன்னதாக அளித்த பேட்டிகளில், பில் கேட்ஸின் திருமணத்துக்கு புறம்பான உறவுகளும், எப்ஸ்டீனுடனான அவரது தொடர்பும் தங்கள் விவாகரத்துக்குக் காரணங்கள் என்று மெலிண்டா முன்பு கூறியிருந்தாலும் அதுகுறித்த மேலும் விவரங்கள் வெளியாகவில்லை.
செல்வந்தரான அமெரிக்க நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளை உள்ளடக்கிய பாலியல் கடத்தல் குற்றச்சாட்டுகளுக்காக நியூயார்க் சிறையில் விசாரணைக்காகக் காத்திருந்தபோது 2019-ல் இறந்தார். அவரது மரணம் அதிகாரப்பூர்வமாக தற்கொலை என்று அறிவிக்கப்பட்டது.
