நமீபியாவில் முத்தத்தின் மூலம் பரவியதாக நம்பப்படும் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தாக்கம் காரணமாக 2 வயது குழந்தைக்கு கண் பார்வை இழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நமீபியாவைச் சேர்ந்த பெண் மிஷேல் சாய்மான். இவரது 2 வயது குழந்தை ஜுவன். இந்த குழந்தைக்கு அரிய வகை வைரஸ் தொற்றால் கண் பார்வை பறிபோனதாக கூறப்படுகிறது, இது தொடர்பாக குழந்தையின் தாய் மிஷேல் கூறியதாவது, சாதாரண கண் தொற்று என தொடங்கியது, பின்னர் பெரிய பாதிப்பாக மாறியது.

முதலில் ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டாலும், குழந்தையின் கண்ணில் கொப்புளம் உருவானது. அதன் விளைவாக கார்னியாவில் 4 மிமீ துளை ஏற்பட்டது. பல வாரங்கள் சிகிச்சை அளித்தும் பாதிக்கப்பட்ட கண்ணின் பார்வையை காப்பாற்ற முடியவில்லை. “என் குழந்தையின் கண்ணில் 4 மிமீ திறந்த காயத்தைப் பார்ப்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” என்று தாய் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் பரிசோதனையில், ஹெர்பெஸ் வைரஸ் தாக்கமே காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. பெற்றோருக்கு வைரஸ் இல்லை என்பதால், கொப்புளம் இருந்த ஒருவரால் முத்தம் மூலம் பரவியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version