மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை இலக்காகக் கொண்டு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.

ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவிற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, இஸ்ரேலின் முக்கிய அரசியல் மையங்களைக் குறிவைத்து ஈரான் இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதில் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகமும் ஒரு முக்கிய இலக்காக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இன்னும் விரிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள்  பல ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாகத் தெரிகிறது. நெதன்யாகு பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பிரதமர் அலுவலகமே குறிவைக்கப்பட்டிருப்பது, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான நேரடிப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது. இதற்கு இஸ்ரேல் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version