Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»கரூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு தாக்கல்.
    அரசியல்

    கரூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கோரி மனு தாக்கல்.

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 19, 2025Updated:September 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    edapadi 1616742788 1617090708 1656394162 1674450511
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் – கோவை சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அதிமுக சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக கரூர் மாவட்ட அவைத்தலைவர் திருவிக என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு..

    அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்டத்தில் வருகின்ற 25ஆம் தேதி மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் கரூர் அரவக்குறிச்சி கிருஷ்ணாயபுரம் மற்றும் குளித்தலை தொகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்கின்ற சுற்றுப்பயணம் மற்றும் பொதுக்கூட்ட நிகழ்வு நடத்த வருகை தர உள்ளார்.

    25 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கரூர் கோவை சாலை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது இதற்காக காவல்துறை அனுமதி கோரி கடந்த 9ஆம் தேதி மனு அளித்தோம். பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து காவல்துறை தரப்பில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர். அதற்கும் முறையான பதில் அளித்தும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே வருகிற 25ஆம் தேதி கரூர் கோவை சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ளது என கூறி அனுமதி தர காவல்துறை மறுக்கிறது. ஆனால் அதே இடத்தில் வேறு அரசியல் கட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அப்போது அரசு தரப்பில் மனுதாரர் பொதுக்கூட்டம் நடத்த மாற்று இடம் வழங்க தயாராக உள்ளதாகவும், பொதுக்கூட்டம் எந்த இடங்களில் நடத்தப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதல் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதி என்பதாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மாற்று இடம் அனுமதி வழங்க தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    அப்பொழுது நீதிபதி மனுதாரர் சம்பந்தப்பட்ட இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனுவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வழங்க வேண்டும் அந்த மனு மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உரிய உத்தரவை 22ஆம் தேதி மழைக்குள் பிறப்பிக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4வது முறையாக வெடி குண்டு மிரட்டல்
    Next Article ‘நகைச்சுவை உணர்வால் தனி இடத்தை உருவாக்கியவர்’ – ரோபோ சங்கர் மறைவிற்கு விஜய் இரங்கல்
    Editor TN Talks

    Related Posts

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.