Close Menu
    What's Hot

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»“பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி” – ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு
    அரசியல்

    “பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும்தான் போட்டி” – ஆர்.பி.உதயகுமார் அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 22, 2025Updated:December 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ups
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    “தேர்தல் களத்தில் 4 பேர் இருப்பதாக கூறுகின்றனர். இதில், இரண்டு பேர் இதுவரை சட்டமன்றம் செல்லாதவர்கள். ஆகவே, இந்தத் தேர்தலில் போட்டி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான்” என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

    இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே தமிழகத்தை வளர்ச்சி அடைந்த முதல் மாநிலமாக மாற்றியவர் பழனிசாமி என்று மக்களே கூறுகின்றனர். தேர்தல் களத்தில் 4 பேர் இருப்பதாக கூறுகின்றனர். இதில் 2 பேர் இதுவரை சட்டமன்றம் செல்லாதவர்கள்.

    ஆகவே, இந்தத் தேர்தலில் போட்டி பழனிசாமிக்கும் ஸ்டாலினுக்கும் தான். இரண்டு ஆட்சியையும் மக்கள் எடை போட்டுப் பார்க்க வேண்டும். இப்போது விளம்பரத்தாலே பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால், உண்மை என்ன என்பது தமிழக மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். காவிரியை காவு கொடுத்ததும் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்ததும் யார்? காவிரியை மீட்டுக் கொடுத்ததும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததும் யார் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.

    பழனிசாமி கொண்டு வந்த காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை ஸ்டாலின் கிடப்பில் போட்டார். அதேபோல 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்கை கிடப்பில் போட்டார். குடிமராமத்து திட்டத்தை முடக்கினார். ஸ்டாலினின் காலை உணவு திட்டத்தில் தற்போது 40 சதவீத மாணவர்கள் குறைந்துவிட்டதாக அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. இது மாணவர்கள் மீதான அக்கறையில் கொண்டு வந்த திட்டமா… அல்லது விளம்பரத்துக்காக கொண்டு வந்த திட்டமா என்று தெரியவில்லை.

    இந்தியாவிலேயே கடன், பாலியல் வன்கொடுமை, சட்டம் – ஒழுங்குசீர்கேட்டில் தமிழகத்தை முதல் மாநிலமாக மாற்றி தலைகுனிய வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாத மின் கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி விட்டனர். வரும் தேர்தலில் உதயநிதியை முதல்வராக அரியணையில் அமர்த்துவதே திமுக-வின் லட்சியமாக உள்ளது.

    நீதிமன்ற தீர்ப்பு, மத்திய அரசின் அறிவிப்பு, எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் கோரிக்கை என எதையும் செயல்படுத்த மாட்டேன் என்று சர்வாதிகாரியாக ஸ்டாலின் செயல்படுகிறார். தங்களது இயலாமையை நியாயப்படுத்துகிற வகையில் அவதூறு பிரச்சாரங்களை அள்ளித் தெளிக்கின்றனர்.

    திமுக என்ற கொடுமையான வெயிலில் மக்கள் வேதனையை அனுபவித்து வருகின்றனர். விரைவில் பழனிசாமியின் நிழல் மக்களுக்குக் கிடைக்கும். தங்களுக்குப் பணமும் அதிகார பலமும் இருப்பதாக ஸ்டாலின் நினைத்தால் அது பகல் கனவாகிவிடும். பழனிசாமிக்குப் பின்னால் எம்ஜிஆர் – ஜெயலலிதாவின் விசுவாசப் படை இருக்கிறது. தேர்தலில் திமுக வீழ்த்தப்பட்டு பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇரவு, பகலாக 4-வது நாளாக போராடும் செவிலியர்கள்: அமைச்சர் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை
    Next Article எகிறி அடிக்கும் தங்கம் விலை!. சவரனுக்கு ரூ.640 உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.
    Editor TN Talks

    Related Posts

    விஜய்யுடன் கூட்டணியா?. சூசகமாக தெரிவித்த காங்.,! திமுகவுடன் விரிசல்?.

    December 23, 2025

    முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

    December 23, 2025

    கிறிஸ்துமஸ் விடுமுறை! 900 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் எதிரொலித்த வங்கதேச வன்முறை!. யூனுஸ் உருவ பொம்மை எரித்து போராட்டம்!.

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.