Close Menu
    What's Hot

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் பதற்றமடைய வேண்டாம்!- இபிஎஸ்
    அரசியல்

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் பதற்றமடைய வேண்டாம்!- இபிஎஸ்

    Editor web1By Editor web1December 19, 2025Updated:December 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EPS 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டு வாக்காளர்கள் பதற்றமடைய வேண்டாம் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிந்து, தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதில், 90 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் பெரும்பாலான போலி வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்றும் அதிமுக ஆரம்பம் முதலே எதற்கு இந்த எஸ்ஐஆர் தேவை என்று கூறிய காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளது என்றும் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.

    எந்த போலி வாக்குகளை வைத்து, மக்களாட்சி விழுமியங்களை வளைத்து ஆட்சியைப் பிடிக்க திமுக நினைத்ததோ, அந்த கனவு மண்ணோடு மண்ணாக போன ஆத்திரத்தில், பதற்றத்தில் பல்வேறு புலம்பல் நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு இருந்தால், பதற்றப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, புதிய வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்ள தேர்தல் ஆணையத்தின் படிவம்-6 அல்லது தாங்கள் இடம் மாறி இருந்து அதனால் வாக்கு நீக்கப்பட்டிருப்பின் படிவம்- 8 நிரப்பி, தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள அடையாள அட்டைகளுள் ஒன்றோடு சமர்ப்பித்தால், தங்களின் பெயர் நிச்சயமாக இணைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு உங்களுக்கு அதிமுக ஓட்டுச்சாவடி பாக முகவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதல்வரும், அவர் தலைமையிலான திமுக-வும் பல்வேறு கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு, தங்கள் ஓட்டு பறிபோனது போல சித்தரிக்கப் பார்ப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அவர்களின் சதிவலையில் யாரும் விழவேண்டாம் என்று தெரிவித்துள்ளார். ஒரு உண்மையான வாக்கு கூட இல்லாமல் போகும் நிலை, அதிமுக இருக்கும் வரை உருவாகாது என்று அவர் உறுதியாக கூறியுள்ளார்.

    அதிமுகவினருக்கு இப்போது தான் மிக முக்கியமான வேலை இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு பூத் வாரியாக பழைய வாக்காளர் பட்டியலோடு, வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிட்டு, வரைவு பட்டியலில் உள்ள வாக்காளர்கள் சரியான காரணத்திற்காக (இறப்பு, இடமாற்றம், இரட்டை வாக்கு) நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். சரியான காரணம் இன்றி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தால், அவர்களின் இல்லத்திற்கே சென்று, அவர்களுக்கு படிவம்-6 / படிவம்-8 நிரப்பி, BLO-விடம் வழங்கி அவர்களின் வாக்குகள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது நம்முடைய தலையாயக் கடமை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    போலி வாக்குகள் நீக்கப்படாமல் இருந்தால், அதனை தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட்டு, அவை நீக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா- பாக். மோதல்
    Next Article 16 பந்துகளில் அரைசதம்…. ஹர்திக் பாண்டியா சாதனை
    Editor web1
    • Website

    Related Posts

    தள்ளிப்போகும் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!. என்ன காரணம்?

    December 23, 2025

    திமுக விருப்ப மனு விநியோகம் எப்போது?. வெளியான அப்டேட்!

    December 23, 2025

    விஜய்யுடன் கூட்டணியா?. சூசகமாக தெரிவித்த காங்.,! திமுகவுடன் விரிசல்?.

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராகுல் காந்தி பொய் பிரசாரங்களின் தலைவர்; நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர்!. கடும் விமர்சனம்!

    பாகிஸ்தானிடம் படுதோல்வி!. கேப்டன், கோச் மீது நடவடிக்கையா?. பிசிசிஐ அதிரடி!

    உலகின் மிகக் கொடூரமான சர்வாதிகாரி!. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேற்றிய இடி அமீன்!.

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    Trending Posts

    இன்று தமிழகம் வருகிறார் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல்!. EPS உடன் பேச்சுவார்த்தை!.

    December 23, 2025

    இந்திய வீராங்கனைகளுக்கு ஜாக்பாட்!. 150% வரை சம்பள உயர்வு!. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

    December 23, 2025

    “இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

    December 23, 2025

    அரசியலுக்கு வராமலேயே நல்லது செய்ய முடியும்: சிவராஜ்குமார் கருத்து

    December 23, 2025

    விமான ஓடுதளத்தில் தேர்வு: 187 இடத்துக்கு 8,000 பேர் போட்டி

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.