இந்த முறை குறி வைத்தால் தப்பாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது.
ஈரானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. ஈரானின் உச்ச தலைவர் கொமேனிக்கு எதிராக பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டத்தை நடத்தி வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் நடந்து வரும் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த ஈரான் அரசு தனது பாதுகாப்பு அப்டையை இறக்கி விட்டது.
போராட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் அடக்க நினைத்தபோது ஏற்பட்ட வன்முறையில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேநேரம் ஈரான் அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க அரசு தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மக்கள் மீது படுகொலை நடத்துவதை நிறுத்தாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக ராணுவ தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.
இது உலகளவில் கவனம் ஈர்த்த சூழலில் அதிபர் டிரம்புக்கு ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதாவது காயடத்துடன் கூட்டத்தில் டிரம்ப் நிற்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, இந்த முறை குறி தப்பாது என ஈரான் தெரிவித்துள்ளது.
கடட்ந்ஹ 2024ம் ஆண்டு டிரம்ப் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவரின் காதை தோட்டா உரசி சென்றது. தற்போது டிரம்புக்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் முன்னதாக நடந்த டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரான் சம்பந்தப்பட்டு இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
