Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்
    அரசியல்

    தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது: நாஞ்சில் சம்பத்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nanjil sambath
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது, ஆனால் வளராது என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர், திருவிடைமருதூர் வட்டம், 69-சாத்தனூர் திருமூலர் கோயிலில் நடைபெற்ற திருமூலர் குருபூஜை விழாவில் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் திமுகவுக்கு மிகப்பெரிய சவால். 2-வது பெரிய கட்சியான அதிமுக, பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அரசியலுக்கு அஸ்தமனத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆக இருக்கும்.

    தமிழகத்தில் பாஜக வளர்ந்தது போல் தெரிகிறது ஆனால் வளராது. ஜிஎஸ்டி வரி குறைத்து விட்டதாக கூறுகிறார்கள். அவர்களுக்கு வாக்கு வங்கி இருப்பதால் சப்பாத்திக்கு குறைத்து விட்டார்கள். இட்லிக்கு 5 சதவீதம் வரி போடுகிறார்கள். மீனவர் எல்லைப் பிரச்சினை கைது நடவடிக்கை தொடர்கிறது. வல்லரசாக தங்களை பறைசாற்றிக் கொள்பவர்கள் அத்துமீறும் முயற்சியை தடுக்காமல் இருப்பதால் அவர்களை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    நடிகர் விஜய் தவெக தலைவராக மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். எடுத்த எடுப்பிலேயே பெரிய கூட்டத்தை ஈர்க்கும் தலைவராகியுள்ளார் எம்ஜிஆரை விட விஜய்க்கு அதிக கூட்டம் கூடுகிறது. அவர் வாகை சூடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    கரூரில் நடந்த சம்பவத்தால், கட்சியில் கட்டுப்பாடு, கடமை உடையவர்களின் வழிகாட்டல் இருந்தால் தொண்டர்களை முறையாக வழிநடத்த முடியும் என்பதை கவனத்தில் கொள்வார் என்று நம்புகிறேன்.

    தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் எப்போதும் நடப்பது தான். தற்போது மீடியா வெளிச்சம் இருப்பதால் பிரகாசமாய் தெரிகிறது. குற்றச் சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும். நாகரிக உலகமாக நம்மை நாம் காட்டிக் கொள்ளும் போது இதில் கோவை சம்பவம் போன்றவைகள் ஏற்படாமல் தடுப்பது அவசியம். முதல்வர் ஸ்டாலின் இதில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்

    நீங்கள் தவெகவில் சேர்ந்து வழிகாட்ட வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, எனக்கு களங்கம் வராமல் இருக்க முயற்சிக்கிறேன். சமய சொற்பொழிவிற்கு வந்ததால் ருத்ராட்ச மாலை அணிவித்தார்கள், அணிந்து கொண்டுள்ளேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றார்.

    nanjil#sambath#politics
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் 218 விஏஓக்கள் நேரடி நியமனத்துக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
    Next Article ஆசியக் கோப்பை அலங்கோலங்கள்: ஹாரிஸ் ராவுஃப் 2 போட்டிகளில் விளையாட தடை; சூரியகுமாருக்கு அபராதம்
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் நேரத்தில் கோயில், பக்தி ! திருமா. மீது குஷ்பு தாக்கு

    December 26, 2025

    விஜய் கட்சியை கிண்டலடித்த சரத்! தேர்தலுக்கு பிறகு தவெக இருக்குமா என கேள்வி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.