திமுக கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஆமாம் சாமி போட வேண்டும் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருக் சூழலில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. அந்த வகையில் சென்னை மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி கூட்டணி கட்சி தலைவர்கள் முன்னிலையில் பேசினார்.
அப்போது, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். தமிழ்நாட்டை ஊழலற்ற பாதுகாப்பான மாநிலமாக மாற்ற வேண்டும், திமுக என்றால் கிரைம், மாபியா, கரப்ஷன். திமுகவை விரட்டி அடிக்கும் கவுன் டவுன் தொடங்கி விட்டது. தமிழ்நாட்டிற்கு இரட்டை என்சின் அரசு வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்கு இயங்குகிறது. தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்த அரசு திமுக தான்.
திமுகவினர் கட்சியில் வளர ஒரு குடும்பத்திற்கு மட்டும் ஆமாம் சாமி போட வேண்டும். கடந்த 11ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு மட்டும் மும்மடங்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.11கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என கடுமையாக சாடியுள்ளார்.
