Close Menu
    What's Hot

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    “வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக… நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” – ராகுல் காந்தி

    மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கின்றது – உதயநிதி
    அரசியல்

    திராவிட இயக்கங்களால் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமாக இருக்கின்றது – உதயநிதி

    Editor TN TalksBy Editor TN TalksJuly 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1939343 udhayanidhistalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு செவிலியர் மற்றும் மகப்பேறு செவிலியர் அவையம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நூற்றாண்டு தொடக்க விழா, 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த செவிலியர் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது,

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு செவிலியர்களுக்கு விருதுகளை வழங்கி விழா பேருரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த ஒரு வாரமாக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். நேற்று நலமாக முதலமைச்சர் வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள்., செவிலியர்களுக்கு இந்த மேடையில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,

    நீதிக்கட்சி நிறைவேற்றிய சட்டம் தான் சட்டபூர்வமாக செவிலியர்களுக்கு ஒழுங்கு முறையை வழங்கியது. இந்த கவுன்சில் தான் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட செவிலியருக்கான முதல் கவுன்சில்.இந்த செவிலியர் கவுன்சில் தான் நூற்றாண்டு கண்ட உலகில் மூன்றாவது செவிலியர் அமைப்பு. இந்த செவிலியர் அமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிற்கே பெருமை.

    நோய்கள் பரவாமல் இருக்க தடுப்பூசிகள் மிக மிக அவசியம், அப்படி தடுப்பூசி போடச் சொல்லிட்ட மருத்துவர்களையும் செவிலியர்களையும் மக்கள் துரத்திய காலம் ஒன்று இருந்தது. ஆனால் அவர்களுக்கும் புரிய வைத்து தடுப்பூசி போட வைத்த பெருமை செவிலியர் சமூகத்திற்கு உண்டு.

    திராவிட இயக்கமும் அப்படித்தான் – சமூகத்தை பிடித்த நோய்களை தீர்ப்பதற்காக., பெரியார், அண்ணா,.கலைஞர், பகுத்தறிவு கருத்துக்களை ஊர் ஊராக சென்று சொன்னார்கள். ஆரம்பத்தில் அவர்களை தடுத்தார்கள், தாக்கினார்கள். ஆனால் அது எல்லாம் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றிய காரணத்தால் தான் இந்த சமூகம் முன்னேறி இருக்கின்றது

    கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் சொந்த வீடு இந்தியாவின் அரசியல் நிகழ்வுகளை தீர்மானம் செய்த இடம். அந்த வீட்டை தன்னுடைய காலத்திற்கு பிறகு, மருத்துவமனையாக்க வேண்டுமென்று எழுதிக் கொடுத்திருக்கிறார், அதேபோல அவர் வழியில் ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் தமிழக சுகாதாரத்துறை மூலம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தந்திருக்கின்றார்,

    இந்த திராவிட மாடல் அரசு என்றைக்கும் செவிலியர்களுக்கு பக்க பலமாக நிற்கும். 100 ஆண்டுகள் காணும் இந்த துறை இன்னும் பல நூறு ஆண்டுகள் மக்கள் சேவையாற்றி வெற்றி காண வேண்டும் ,

    மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா சுப்பிரமணியன்,பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் எழிலன்,தாயகம் கவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோலீசார் மீது நடிகர் மன்சூர் அலிகான் புகார்..
    Next Article முன்னாள் எம்.பி.ஞானதிரவியம் வழக்கு – இன்ஸ்பெக்டர்களுக்கு சம்மன்
    Editor TN Talks

    Related Posts

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025

    பசுமைத் தாயகம் தலைவர் பொறுப்பிலிருந்து சவுமியா அன்புமணி நீக்கம்! ராமதாஸ் அதிரடி!

    December 29, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீண்டும் இணையும் ‘சூப்பர் டீலக்ஸ்’ கூட்டணி?

    “வெறுப்பை இயல்பாக்குகிறது பாஜக… நாம் செயலிழந்த சமூகமாக மாறிவிடக் கூடாது” – ராகுல் காந்தி

    மகரவிளக்கு வழிபாடு: சபரிமலை ஐயப்பன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடை திறப்பு

    பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணிதான்! காந்திமதியை விமர்சித்து போட்டி அறிக்கை

    விஜய் உடன் கூட்டணி உறுதியானது? தவெக உடன் ஒப்பந்தம் போட்ட டிடிவி தினகரன் – ஓபிஎஸ்? மிகப்பெரிய முடிவு

    Trending Posts

    மகனை சரியா வளர்க்கல; கனவில் சொன்ன தாய்!. கண்ணீர் சிந்திய ராமதாஸ்!.

    December 29, 2025

    விஜய் நாவை அடக்கி பேசவேண்டும்!. செல்லூர் ராஜு கொந்தளிப்பு!

    December 29, 2025

    ‘‘திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் கஞ்சா கலாச்சாரம் உச்சத்தை அடைந்துள்ளது’’ – அன்புமணி

    December 29, 2025

    உன்னாவ் வன்கொடுமை வழக்கு!. எந்த சூழ்நிலையிலும் குல்தீப் செங்காரை விடுவிக்க முடியாது!. ஜாமீனை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம்!

    December 29, 2025

    பிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,

    December 29, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.