அபிமான நிறுவனங்கள் தயாரிக்கும் நேர்த்தியான ஆடைகளை உடுத்துவது இன்றைய வாழ்க்கையில் மக்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். மக்கள் தங்களது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நேரம் செலவிடுவதுடன், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உடை உடுத்த ஏராளமான பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை.

சக மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதற்கான ஆசை மற்றும் உள்ளுணர்வு, அவர்களை அடிக்கடி மிகவும் விலையுயர்ந்த ஆடைகள், வாட்ச், நகைகளைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றது.

அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியபோது, மைதானத்தில் கணவர் விராட் கோலியை உற்சாகப்படுத்த வந்திருந்த நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருந்த பிரெஞ்சு பிராண்டான ‘Sézane’ நிறுவனத்தின் ‘Rodolfo’ ரக வெள்ளை நிற எம்பிராய்டரி மேலாடை (Blouse), எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. இதன் விலை சுமார் ரூ.17,000 ஆகும். மிகவும் சாதாரணமாகத் தெரிந்த இந்த ஆடையே இவ்வளவு விலையா என ரசிகர்கள் வியந்து வரும் நிலையில், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அதைவிடப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனுஷ்கா தனது கையில் அணிந்திருந்த அந்தத் தங்க நிற கடிகாரம், புகழ்பெற்ற ‘கார்டியர்’ (Cartier) நிறுவனத்தின் ‘Panthère de Cartier’ ரகத்தைச் சேர்ந்தது. 1980-களின் கிளாசிக் வடிவமைப்பைக் கொண்ட இந்த வாட்ச், 18 காரட் தங்கத்தினால் ஆனது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.24 லட்சம் முதல் ரூ.61 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. “குயட் லக்சரி” (Quiet Luxury) எனப்படும் ஆர்ப்பாட்டமில்லாத ஆடம்பரத்திற்கு உதாரணமாகத் திகழும் அனுஷ்காவின் இந்த ஸ்டைல், தற்போது பேஷன் உலகில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. ஒரு சாதாரண மேட்ச் பார்க்க இவ்வளவு விலையுயர்ந்த அணிகலனா என நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version