நடந்து முடிந்த இந்தியா, தெ.ஆப்பிரிக்க அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே நிலவியது.

இந்தியா, தெ.ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 349 ரன்களை விளாசியது. விராட் கோலி 135 ரன்களை விளாசினார். பின்னர் 2வது பேட் செய்த தெ.ஆப்பிரிக்க அணி 332 ரன்களை சேர்த்தது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து ராய்ப்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 358 ரன்களை குவித்தது. இந்திய அணி வீரர்கள் கோலி 102, கெய்க்வாட் 105 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த தெ.ஆப்பிரிக்க அணி 362 ரன்களை எடுத்து வென்றது. அந்த அணி வீரர் மார்கரம் 110 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

இதைத் தொடர்ந்து, இன்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில், தெ.ஆப்பிரிக்க அணி வீரர் டி-ஹாக் 106 ரன்களை விளாசினார். தெ.ஆப்பிரிக்க அணி 270 ரன்களை சேர்த்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 116 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

 

இதுபோல 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் மொத்தம் 6 சதம் விளாசியுள்ளனர். போட்டித் தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே நிலவியது. பவுலர்களின் பந்துவீச்சு எடுபடவில்லை எனக் கூறலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version