Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»கபடி உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி சாதனை!
    விளையாட்டு

    கபடி உலகக் கோப்பையை வென்று இந்திய மகளிர் அணி சாதனை!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kbd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

    சர்வதேச கபடி சம்மேளனம் சார்பில் இரண்டாவது மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரானது வங்கதேச தலைநகர் தாக்காவில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதல் முறையாக இந்தியா தவிர்த்து வேறு நாட்டில் உலகக் கோப்பை தொடர் நடைபெறுவதால், இதன் மீதான எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் சற்று கூடுதலாகவே இருந்தது.

    மொத்தம் 11 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, வங்கதேசம், ஈரான் மற்றும் சீன தைபே அணிகள் முன்னேறின. அரையிறுதி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 33-21 என்ற கணக்கில் ஈரான் மகளிர் அணியையும், சீன் தைபே அணி 25-18 என்ற கணக்கில் வங்கதேசத்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

    நேற்றைய தினம் இந்தியா மற்றும் சீன தைபே அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியானது நடைபெற்றது. இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய மகளிர் அணி அடுத்தடுத்து புள்ளிகளை வென்று அசத்தியது. அதேசமயம் சீன தைபே அணியும் விட்டுக்கொடுக்காமல் விளையாட ஆட்டத்தின் பரபரப்பு கூடியது.

    இருப்பினும் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி 20 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், சீன தைபே மகளிர் அணியால் 16 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் பாதியில் முன்னிலை பெற்றுது.

    பின்னர் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி முன்னிலையைத் தக்கவைத்ததுடன், 15 புள்ளிகளை வென்றது. மறுபக்கம் இறுதிவரை போராடிய சீன தைபே மகளிர் அணியால் இரண்டாம் பாதியில் 12 புள்ளிகளை மட்டுமே எடுக்க முடிந்தது.

    இதன் மூலம் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 35-28 என்ற புள்ளிகள் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு கபடி உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றது.

    இதன் மூலம் இந்திய மகளிர் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் மகளிர் கபடி உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2வது டெஸ்ட்: இந்தியாவுக்கு இமாலய இலக்கு
    Next Article சபரிமலை பக்தர்களுக்காக… 108 ஐயப்ப சரணம்!
    Editor TN Talks

    Related Posts

    பிரதமரின் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி

    December 26, 2025

    இங்கிலாந்து அணி பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க மான்டி பனேசர் கோரிக்கை

    December 26, 2025

    பாட்மிண்டன் சம்மேளன ஆணைய தலைவராக பி.வி.சிந்து தேர்வு

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.