உலக பாட்மிண்டன் சம்மேளனம் (பிடபிள்யூஎப்) சார்பில் செயல்படும் விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராக இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2026ம் ஆண்டு முதல் 2029ம் ஆண்டு வரை இந்தப் பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்த ஆணையத்தில் உறுப்பினராக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து கடந்த 2017ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். மேலும், 2020ம் ஆண்டு முதல் உலக பாட்மிண்டன் சம்மேளன ஒருங்கிணைந்த தூதராகவும் அவர் பணியாற்றி வருகிறார்.
