இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி டெஸ்ட் தொடர் இன்று தொடங்குகிறது. தொடரை சமன் செய்யும் முனைப்பில் இந்திய வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ’ஆண்டர்சன்-தெண்டுல்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4-வது டெஸ்டில் டிராவில் முடிந்ததால், இத்தொடரில் இங்கிலாந்து 2-1 என்றா கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் தொடர் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடைசி டெஸ்டுக்கான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பந்து தாக்கி கால்பாதத்தில் எலும்பு முறிவுக்குள்ளான விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் விலகி விட்டார். வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவை ஓய்வெடுக்கும் படி கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.

அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் களமிறங்குகிறார். ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவை சேர்ப்பது குறித்தும் அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அதேப் போல இங்கிலாந்து அணியிலும் 4 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 4-வது டெஸ்டில் தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்ட கேப்டன் பென் ஸ்டோக்ஸ், உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் முக்கியமான இந்த டெஸ்டில் இருந்து விலக வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக துணை கேப்டன் ஆலி போப் அணியை வழிநடத்துகிறார். இதே போல் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சாளர் லியான் டாசன், பிரைடன் கார்ஸ் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு பதிலாக ஜேக்கப் பெத்தேல், அட்கின்சன், ஜேமி ஓவர்டான், ஜோஷ் டாங்கு ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெற்றுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version