திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்போரூர் பகுதியில் புதிய பேரூராட்சி அலுவலகம் வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாளாக வைத்த கோரிக்கையின் பேரில் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில்   புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுமான பணி மற்றும் பாலவாக்கம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில் அதனை சரி செய்யும் விதமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மிகவும் அவசியம் என்பதனால் இந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என அரசு அதிகாரியிடம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது திருப்போரூர் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி தலைவர் தேவராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version