கோவை கலெக்டர் அலுவலக இ-மெயிலுக்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
உடனே அங்கு இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதை அடுத்து அலுவலக ஊழியர்கள் உயர் அதிகாரிகள் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்தனர்.
கலெக்டர் அலுவலக வாகன நிறுத்தும் இடம், அலங்கார செடிகள், புதிய கட்டிடத்தில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் பழைய கட்டிட அலுவலக உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இதுவரை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் 23-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளிதான் என தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
