நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யிடம் இருந்து  விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சசிகலா முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது, விஜய் மற்றும் சங்கீதா தரப்பில், அவர்களது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையை ஒத்திவைக்கும் படி விஜய் தரப்பு வழக்கறிஞர் கேட்டு கொண்டார். பிறகு, வழக்கு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டார்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கை விசாரித்து வந்த குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சசிகலா பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப நல நீதிபதியாக கடந்த மாதம் பொறுப்பேற்ற நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிபதியாக இருந்த சுஜாதா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version