Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனையை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் !
    தமிழ்நாடு

    அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனையை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் !

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    misra
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு, நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனையை விதித்துள்ளது.

    கோயம்பேட்டில் உள்ள 17 சென்ட் நிலம் கடந்த 1983ஆம் ஆண்டு லலிதாம்பாள் மற்றும் அவரது சகோதரர் விஸ்வநாதனிடம் இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது. அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

    2003 ஆம் ஆண்டு, நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இருவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் 10.5 சென்ட் நிலத்தை திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டது. மீதமுள்ள 6.5 சென்ட் நிலம் சாலை விரிவாக்கத்திற்காக தேவைப்படுவதாக தெரிவித்து வீட்டு வசதி வாரியம் அதை தக்க வைத்துக் கொண்டது.

    இதையும் படிக்க: மா.சுப்பிரமணியன் மீதான நில மோசடி வழக்கு

    இருப்பினும், அந்த நிலமும் பாவனைக்காக பயன்படுத்தப்படவில்லை என்பதால் அதை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மனுதாரர்கள் மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணிந்தனர்.

    2023 ஆம் ஆண்டு, இந்த மனுவின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம், இரண்டு மாதங்களில் நிலம் தொடர்பான தீர்வை சட்டப்படி வழங்க உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றாததால், அப்போதைய உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கில் வாதங்களை பரிசீலித்த நீதிபதி வேல்முருகன், அதிகாரி அளித்த விளக்கத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவை தவிர்த்ததாகக் கருதி, அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    மேலும், இந்த தொகை அவர் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றும், மூன்று வாரங்களில் இழப்பீடு அளிக்க தவறினால் கூடுதலாக 10 நாட்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிக்க:  காலை உணவுத் திட்ட விரிவாக்கம்… ஜூன்.3 முதல் தொடங்க திட்டம்…

    தண்டனை நிறைவேற்றம் மேல்முறையீடுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நீதிபதி மேல்முறையீடு செய்யப்படாவிட்டால் தண்டனை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு அறிவுறுத்தினார்.

    அத்துடன், நீதிபதி வேல்முருகன் தனது தீர்ப்பில் குறிப்பிடும்போது, அரசு அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறுவதால் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்றும், அதிகாரிகள் சட்டத்திற்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

    Anshul Mishra Appeal case Chennai Metropolitan Development Authority compensation contempt of court court hearing disobedience government land government officials jail sentence Justice Velmurugan Lalithambal land acquisition land recovery legal order Madras High Court rule of law salary deduction Tamil Nadu Housing Board Viswanathan அரசு அதிகாரிகள் அரசு நிலம் அன்சுல் மிஸ்ரா இழப்பீடு ஊதிய பிடித்தம் சட்ட அரசியல் சட்ட உத்தரவு சட்டபூர்வ நடவடிக்கை சிறை தண்டனை சென்னை உயர்நீதிமன்றம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிலம் மீட்பு நீதிபதி வேல்முருகன் நீதிமன்ற அவமதிப்பு நீதிமன்ற விசாரணை புறக்கணிப்பு மேல்முறையீடு லலிதாம்பாள் வழக்கு விஸ்வநாதன் வீட்டு வசதி வாரியம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅவதூறு கருத்துகளை நிறுத்துங்கள்… நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி… நீதிமன்றம் அதிரடி…
    Next Article அண்ணாமலை பாணி பாஜகவுக்கு வேண்டாம்… என்ன செய்தது வார் ரூம் பாலிடிக்ஸ்?
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.