Close Menu
    What's Hot

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்திடுக… ஆ.ராசா மனு தாக்கல்…
    தமிழ்நாடு

    சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்திடுக… ஆ.ராசா மனு தாக்கல்…

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 8
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீலகிரி தொகுதி எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த குற்றப்பத்திரிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் ஆராசா வருமானத்திற்கு அதிகமாக 579 சதவீதம் அதாவது ரூ.5.53கோடி சொத்து குவித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆ.ராசா தரப்பில், வருமான வரி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் சில ஆவணங்களை வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

    1 6

    அதற்கு சிபிஐ தரப்பில், ‘ஆ.ராசா தாக்கல் செய்துள்ள வருமான வரி விவரங்கள் அவரிடமே உள்ளபோது வழக்கு ஆவணங்களை எதற்காக கோர வேண்டும். சாட்சி விசாரணையின்போது அவர் அந்த ஆவணங்களைப் பெற்று சரிபார்க்கலாம். எனவே, வழக்கு ஆவணங்களை வழங்கக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வருமான வரி கணக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டுமென ஆ.ராசா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.பின்னர் ஆ.ராசாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், ஜூலை 23-ம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்த நீதிபதி, அன்றைய தினம் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி, இன்று(23.06.2025) ஆ.ராசா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். இதையடுத்து குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைக்கப்பட்டு வரும் 30ஆம் தேதி அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுருக பக்தர்கள் மாநாடா? அரசியல் மாநாடா? சாதித்தது என்ன? சறுக்கியது எங்கே?..
    Next Article கோவையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்… வேல் கொடுத்து வரவேற்ற தமிழக பாஜகவினர்..
    Editor TN Talks

    Related Posts

    என்னையும் விஜய்யையும் பாஜக பெற்றெடுத்தபோது திருமா தான் பிரசவம் பார்த்தார்!. சீமான் பதிலடி!.

    December 27, 2025

    என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்

    December 27, 2025

    விவசாயி வேடத்தில் நடக்கும் அரசியல்; முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செயல்படாத அதிமுக்கிய ‘ஆதார்’ சேவை மையம்! விழிபிதுங்கும் மக்கள்!

    முதல்வர் ஸ்டாலினுக்கு இ.பி.எஸ் ஓபன் சேலஞ்ச்! அப்படி என்ன பேசினார்கள் தெரியுமா?

    கேப்டன் அமெரிக்கா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் வரும் கிறிஸ் இவான்ஸ்!

    ஜனநாயகன் Ramp Walk… நடனமாடிய விஜய்- பூஜா ஹெக்டே: வைரலாகும் புகைப்படங்கள்

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தங்கம் விலை மீண்டும் உயர்வு… எவ்வளவு தெரியுமா?

    December 20, 2025

    சூப்பர் டூப்பர் ஹிட்! ரூ.1,000 கோடியை தாண்டியது துரந்தர் வசூல்!

    December 27, 2025

    2 விநாடிகளில் மணிக்கு 750 கி.மீ. வேகம்… சீனா ரயில் சாதனை

    December 27, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.