ஆதார் கார்டில் உள்ள விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மேலும் நீட்டித்துள்ளது.

ஆதார் எண் மற்றும் அட்டையை பெறுவதற்காக பதிவு செய்யப்படும் விவரங்களில் மோசடியைத் தவிர்க்கவும், அதனை ஒழுங்குமுறைப்படுத்தரவும் கடந்த 2016ல் ஒழுங்குமுறை விதிகளை ஆதார் ஆணையம் அறிமுகம் செய்தது. அந்த வகையில், ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை வைத்திருப்பவர் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர் திருத்தம், தந்தை அல்லது கணவர் அல்லது பராமரிப்பாளர் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், கைப்பேசி எண், பிறந்த தேதி, முகவரி ஆகியவற்றின் அண்மைத் தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதி 2027 ஜூன் 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெயர், தேதி, பாலினம், கைப்பேசி எண் விவரங்களை புதுப்பிக்க ஆதார் மையத்தையும், முகவரி மாற்றத்திற்கு இணையதளம், ஆதார் செயலி மூலமும் புதுப்பித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முகவரி மாற்றத்திற்கு http://myadhaar.udi.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும் ஆவணத்தை பதிவேற்றம் செய்து தகவல்களை புதுப்பித்துக்  கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

mAadhaar செயலியின் சேவை விரைவில் நிறுத்தப்பட உள்ளநிலையில், புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version