2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் டிசம்பர் 15 முதல் 23 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அடுத்தாண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. டிசம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அரசியல் கட்சிகளும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்தநிலையில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இன்று (டிச. 11) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத்  தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை விருப்ப மனு விநியோகிக்கப்படும் என்றும் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 15ம் தேதி மட்டும் நண்பகல் 12 மணியில் இருந்து விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. படிவங்களில் கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து, கட்சியின் தலைமையிடம் வழங்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version