சென்னையில் இன்று (டிச.,23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில், முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பல நாடுகளும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்வதால், அதன் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, நம் நாட்டில் தங்கம் விலை, தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், கடந்த (டிச.,15) ஆபரண தங்கம் கிராம், 12,515 ரூபாய்க்கும்; சவரன், ஒரு லட்சத்து 120 ரூபாய்க்கும் விற்பனையானது.
அந்தவகையில் நேற்று (டிச.,22) திடீரென தங்கம் விலை சவரனுக்கு, 1,360 ரூபாய் உயர்ந்து, 1,00,560 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று (டிச.,23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ1,02,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,770க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை கடந்து மேலும் அதிகரித்து வருவதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.234க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.3 ஆயிரம் அதிகரித்து வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. வரலாற்றிலேயே இல்லாத வகையில் வெள்ளி விலை புதிய உச்சம் தொட்டுவருகிறது.
