வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நாளை முதல் 28-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 24, 25-ம் தேதிகளில் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26, 27-ம் தேதிகளில் டெல்டா, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளிலும் 28-ம் தேதி தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் இன்று முதல் வறண்ட வானிலை நிலவும். அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 26-ம் தேதி வரை குறைந்தபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும். நீலகிரி மாவட்டத்தில் இன்று இரவு அல்லது அதிகாலை உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குறைந்தபட்சமாக ஊட்டி, குன்னூரில் 7 டிகிரி செல்சியஸ்யஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
