தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, சி.ஜோசப் விஜய் இன்று முதல்முறையாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். கோட்டைக்கு வருகை தந்த முதலமைச்சரை தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கட்சியின் தலைவராக இருந்து மாநிலத்தின் முதல் குடிமகனாகக் கோட்டைக்குள் அவர் நுழைந்த அந்தத் தருணம், தமிழக அரசியலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்திலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழிநெடுகிலும், பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டு நின்று முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மலர்களைத் தூவியும், முழக்கங்களை எழுப்பியும் மக்கள் காட்டிய அன்பு மழையில் நனைந்தபடி, கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்தவாறே அவர் கோட்டைக்குச் சென்றடைந்தார். தலைமைச் செயலகத்தில் தனது பணிகளைத் தொடங்கிய அவர், அங்குள்ள முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து முக்கிய கோப்புகளை ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கான கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார். அதாவது, நாளை (மே 11-ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version