Close Menu
    What's Hot

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கிணற்றில் கொட்டிய அபாயகரமான கழிவு : சூலூர் பீடம் பள்ளி மக்கள் புகார்
    தமிழ்நாடு

    கிணற்றில் கொட்டிய அபாயகரமான கழிவு : சூலூர் பீடம் பள்ளி மக்கள் புகார்

    Editor TN TalksBy Editor TN TalksJune 10, 2025Updated:June 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Tamil News lrg 3952053
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பாசன கிணற்றில் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி, நிலத்தடி நீரை மாசடைய செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கோவை, சூலூர் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பாசன கிணற்றில் கடந்த சில மாதங்களாக 500 லாரிகளுக்கு மேலாக பவுண்டரியில் இருந்து வெளியேறும் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

    இதனால் அருகே உள்ள விவசாய நிலங்கள் சுற்றுப்புற கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் அருகில் செல்லும் நீரோடைகள் மாசடைந்து பாதிக்கப்பட்டு உள்ளன.

    ரசாயன கழிவுகள் காற்றில் கலந்து அருகில் உள்ள விவசாய நிலங்களில் பரவி மண்வளம், பாதிக்கப்பட்டு, விவசாய பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    அண்மையில் பெய்த மழை நீரோடு இந்த ரசாயன கழிவுகள் கலந்து நிலத்தடி நீரை மாசுபடுத்தி உள்ளது. இந்த ரசாயன கழிவு நீர் கனமழை பெய்யும் காலங்களில் விவசாய நிலங்களில் உள்ள நீரோடை வழியாக பிரதான ஓடையில் கலந்து பீடம்பள்ளி, நடுப்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம் மற்றும் சூலூர் வழித் தடங்களில் உள்ள நீர்த்தேக்கத்தில் கலந்து நொய்யல் ஆற்றில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதத்தில் பீடாம்பள்ளி ஊராட்சி செயலாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிறுவனத்தின் சார்பாக மேலும் இரசாயன கழிவுகளை கொட்டுவதில்லை, என ஊராட்சி அலுவலகம் வாயிலாக மக்களிடம் உறுதி அளித்தனர்.

    இச்சூழலில் இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் 2 ஏக்கர் பரப்பளவு 4 அடி உயரத்தில் கழிவுகளை கொட்டி, மாசு ஏற்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி பீடம்பள்ளி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

    chemical waste dumped in well dangerous liquid in school area public complaint Sulur Sulur environmental issue Sulur school well waste toxic waste near school Tamil Nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசங்கராபுரம் ஆய்வாளர் பணியிடை நீக்கம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Next Article சந்திரமுகிஇல் ஜோதிகா செய்த வேடம் எனக்கே வந்திருந்தது – நடிகை சிம்ரன் புது தகவல்!
    Editor TN Talks

    Related Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    Trending Posts

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    “வாகை சூடும் வரலாறு திரும்பும்; வீடு வீடாக செல்லுங்கள்”!. தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்!

    April 11, 2026

    அடுத்த அதிரடி!. தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    4-வது முறையாக தமிழகம் வரும் பிரதமர்!. வேட்பாளர்களை ஆதரித்து ரோடு ஷோ பிரச்சாரம்!

    April 11, 2026

    தமிழ்நாட்டில் தேர்தலை நிறுத்த வேண்டும்!. உச்ச நீதிமன்றத்தில் அவரச வழக்கு!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.