கமல்ஹாசன் ஏற்பாட்டில் நாளை மதுரையில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் இணைந்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் களமும் பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. அந்தவகையில், கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு போற்றும் நிகழ்ச்சி Rememberimg Bapuji & Brothers என்ற தலைப்பில் மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியன், காதர் மொகிதீன், ஜவாஹிருல்லா, கொங்கு ஈஸ்வரன், வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
நாளை மறுநாள் முதல் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை திமுக நடத்த உள்ள நிலையில் நாளைய தினம் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர். இதில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்ய ஆலோசனை நடத்தவும் வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
