Close Menu
    What's Hot

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர் : காவலர் கொலை வழக்கு… தேடப்பட்ட குற்றவாளி என்கவுண்டரில் பலி…
    தமிழ்நாடு

    திருப்பூர் : காவலர் கொலை வழக்கு… தேடப்பட்ட குற்றவாளி என்கவுண்டரில் பலி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025Updated:August 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூரில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் பலியானார்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அதிமுக எம்.எல்.ஏவான மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உடுமலை அருகே சிக்கனூத்து கிராமத்தில் உள்ளது. தென்னை சாகுபடி செய்யப்படும் இந்த தோட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த மூர்த்தி என்பவர் அவரது மகன் மணிகண்டன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.

    மூர்த்தியின் மற்றொரு மகனான தங்கபாண்டி, கடந்த 5-ம் தேதி இரவு தென்னந்தோப்புக்கு வந்துள்ளார். அங்கு அனைவரும் கறி விருந்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். அப்போது தந்தை-மகன்களுக்கு இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மணிகண்டன் தந்தை மூர்த்தியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த மூர்த்தி திருப்பூர் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தன்னை தனது மகன்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் ரோந்து பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் அழகுராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

    அப்போது, தந்தை-மகன்களுக்கு இடையே நடந்த சண்டையை விலக்கி விட முயற்சித்த போது, எங்கள் பிரச்னையில் தலையிடுவதற்கு நீங்கள் யார்? என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அத்தோடு மணிகண்டன் அங்கிருந்த அரிவாளால் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் காயமடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    அத்தோடு அங்கிருந்த காவல்துறையின் வாகனத்தையும் தந்தை மகன்கள் சேதப்படுத்தியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் சண்முகவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்தோடு தலைமறைவான தந்தை மகன்களை 6 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதற்கிடையில் மூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தலைமறைவான மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான மணிகண்டனை போலீசார் என்கவுண்டர் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ”கைது செய்யச் சென்ற காவல் உதவி ஆய்வாளர் சரவணக்குமாரை வெட்டி விட்டு தப்ப முயன்ற போது, தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் மணிகண்டன் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாக” தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேலின் உடலுக்கு அமைச்சர், ஆட்சியர், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து உடுமலை மின்மயானத்தில் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சண்முகவேலின் உடல் தகனம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்த சண்முகவேலின் குடும்பத்தினருக்கு ரூ.1கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

    கொலை சம்பவத்தில் தொடர்புடைய தந்தை-மகன்கள் 3 பேர் மீதும், பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தின் சிற்பி – மு.க ஒரு சகாப்தம்
    Next Article பாஜகவின் ஸ்லீப்பர் செல் துரைவைகோ – மல்லை சத்யா குற்றச்சாட்டு
    Editor TN Talks

    Related Posts

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.11 லட்சம் பேர் விண்ணப்பம்! வரும் 27, 28- 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்!

    December 23, 2025

    சென்னை – தூத்துக்குடிக்கு ரூ.13,400! 3 மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்

    December 23, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    Trending Posts

    ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ படத்தின் டீசர் வெளியீடு!

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ வெளியாவதில் சிக்கல்..? காரணம் என்ன?

    December 23, 2025

    பாஜக கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்: தமிழிசை

    December 23, 2025

    ‘ஜனநாயகன்’ ஆடியோ விழாவில் அரசியல் பேசத் தடை?

    December 23, 2025

    குளிர்கால ஒலிம்பிக் விழாவின் ஜோதியை ஏந்திச் சென்றார் ஜாக்கி சான்!

    December 23, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.