Close Menu
    What's Hot

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழகத்தின் சிற்பி – மு.க ஒரு சகாப்தம்
    அரசியல்

    தமிழகத்தின் சிற்பி – மு.க ஒரு சகாப்தம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 7, 2025Updated:August 7, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mk 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இன்று. இந்திய அரசியல் ஆளுமைகளுள் ஆகச்சிறந்தவர் என கூறலாம். ஆழ்ந்த அரசியல் ஞானம் கொண்ட இவரை முத்தமிழறிஞர், கலைஞர், மு.க என்ற அடைமொழிகளைக் கொண்டே பலர் அழைப்பது வழக்கம். அரசியலில் விமர்சிப்பவர்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிபவர்கள் மத்தியில், தன்னை விமர்சிப்பவர் வாயடைத்து போகும் வகையில் பதில் அளிப்பதில் கலைஞர் வல்லவர். ஏழை மக்களால் பெரிதும் விரும்பப்பட்டும், அதே சமயத்தில் ஒரு தரப்பால் வெறுக்கப்பட்ட நபரும் இவரே. பேட் மேன் படத்தில் ஒரு வசனம் உண்டு, ஒன்று நீங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாயகனாக மரணிக்க வேண்டும், இல்லையென்றால் உங்களை நீங்களே வில்லனாக பார்க்கும் அளவுக்கு வாழவேண்டும் என்று. அந்த வசனம் கலைஞரின் வாழ்வுக்கு கச்சிதமாக பொருந்தும்.

    mk 2

    கருணாநிதியை இகழ்வதற்கோ, புகழ்வதற்கோ அல்ல இந்த பதிவு. ஒருவேளை மு.கருணாநிதி என்று ஒருவர் இல்லை என்றால் நாம் எதை எல்லாம் பெற்றிருக்க மாட்டோம் என்பதற்கே இந்த பதிவு. தான் போட்டியிட்ட முதல் தேர்தல் முதல் கடைசி தேர்தல் வரை தோல்வியையே சந்திக்காமல் 13 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1984-ல் மட்டும் அவர் தேர்தலில் நிற்கவில்லை. கலைஞரை போல் தோல்வியை கண்டவனும் இல்லை, அவரை போல் அதில் இருந்து மீண்டு வந்து வென்றவனும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்த அவர், கை ரிக்சாவை ஒழித்தது, பிச்சைக்காரர்களுக்கென விடுதி அமைத்தது, சமத்துவபுரங்களை அமைத்தது, டைடல் பார்க் கொண்டு வந்தது என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தார். பொறியியல் படிப்புகள் ஏழை மாணவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த போது அதற்கான கதவுகளை திறந்து விட்டார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, 33 சதவீதம் இட ஒதுக்கீடு, சேலம் உருக்காலை, சிட்கோ, சிப்காட் தொழில் வளாகங்கள், கிராமங்களுக்கு சாலை வசதி, சிற்றுந்து வசதி, கைம்பெண் மறுமண உதவித்தொகை, வீடு கட்டும் திட்டம், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம், தமிழில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை போன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார்.

    முக்கியமாக தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து பெற்றது, மெட்ரோ திட்டம் கொண்டு வந்தது, காப்பீட்டு திட்டம் என இன்னும் பலவற்றை செய்திருக்கிறார். இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தியதாக கலைஞர் மீது விமர்சனம் இருந்தாலும், இல்லாதவனுக்கே அதன் அருமை புரியும் என தெரிந்து விமர்சனங்களை புறந்தள்ளியவர் அவர்.

    mk

    கலைஞர் கருணாநிதி என்ன செய்தார் என கேட்போர், கொஞ்சம் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு விளிம்பு நிலையில் உள்ள பாமர மக்களிடம் பேச்சுக் கொடுத்து பாருங்கள், அவர்கள் அன்றாட பணியில் எங்காவது தனது திட்டத்தின் மூலம் கலைஞர் சிரித்துக் கொண்டிருப்பதை காண முடியும். கருணாநிதியை சுயநலவாதி என கருதுவோர் பலர், ஆம் அவர் சுயநலவாதி தான். பாமர மக்கள் நன்றாக வாழ வேண்டும் என நினைத்த சுயநலவாதி. தமிழ் தான் தனது மூச்சு என பாடுபட்ட சுயநலவாதி. ஆனால் அவரது உடன்பிறப்புகளுக்கு, கலைஞரின் நினைவிடத்தில் எழுதியது போல ஓய்வெடுக்காமல் உழைத்த ஒரு சூரியன். நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருங்கள், ஒருவேளை நீங்கள் பிற மாநிலங்களுக்கு பயணிக்கும் போது உங்களுக்குள் தமிழ்நாட்டில் பிறந்ததற்காக கர்வம் கொண்டீர்கள் என்றால், அதற்கு காரணமான தலைவர்களில் இந்த கருணாநிதி முதன்மையானவராக இருப்பார். நினைவில் வையுங்கள் திமுக இருக்கும் வரை இந்த மு.க-வும் மக்கள் மனதில் நீங்காமல் இருப்பார் என்பதை மறவாதீர்கள்..

    CM MK Stalin deputy cm karunanithi Tamil Nadu CM tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீண்டும் ஒரு ரிதன்யா..! – வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
    Next Article திருப்பூர் : காவலர் கொலை வழக்கு… தேடப்பட்ட குற்றவாளி என்கவுண்டரில் பலி…
    Editor TN Talks

    Related Posts

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    July 15, 2026

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    July 15, 2026

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விலை பேசப்படும் எம்.எல்.ஏ-க்கள்:  தவெக மீதான குற்றச்சாட்டு குறித்து திருமாவளவன் கவலை

    அதிமுகவை அழிச்சது வேற யாரும் இல்ல.. இபிஎஸ் தான்..!! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்..!!

    பழனி கோவில் நில மோசடி வழக்கில் புதிய திருப்பம்… சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு!

    “‘வந்தே மாதரம்’ கட்டாயம்: முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது”

    காமராஜரை சொந்தம் கொண்டாடும் தவெக.. இது பொருத்தமில்ல..!! ராஜேந்திர பாலாஜி ஆவேசம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.