தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏறுமுகமாக இருந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு அதிரடியாக ரூ.1,200 வரை உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 360-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 880-க்கும் விற்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 210-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 680-க்கும் விற்பனை ஆனது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், ஒரு சவரன் ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளைய தினம் (ஏப்ரல் 19) அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், நகைக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தங்கம் விலை தங்கம் சவரன் ரூ.1.15 லட்சத்தை நெருங்கி வருவது நகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.280-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்திருப்பது இந்த திடீர் விலை உயர்வுக்கு முதன்மை காரணங்களாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாகக் கருதி அதிகளவில் வாங்குவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அட்சய திருதியை முன்னிட்டு பல நகைக்கடைகளில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கவலையடையச் செய்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version