Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவை: ரூ.1.5லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது…
    தமிழ்நாடு

    கோவை: ரூ.1.5லட்சம் லஞ்சம்… அறநிலையத்துறை பெண் உதவி கமிஷனர் கைது…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 18, 2025Updated:July 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் ரூ.1.5லட்சம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர்.

    கோவையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனராக இந்திரா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், ”சூலூர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கோயிலில் அதிக வருவாய் வருவதாகவும், ஆனால் அந்தக் கோயிலில் முறையான நிர்வாகம் இல்லாததால், அக்கோயிலை இந்து சமய அறநிலைய துறை எடுத்துக் கொள்ள வேண்டும்” எனவும் கூறியிருக்கிறார்.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்திலும் சுரேஷ் குமார் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜூன் 16-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ”கோயிலை அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும் நடைமுறையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்தது.

    அதன் அடிப்படையில், சுரேஷ் குமார், அறநிலையத்துறை உதவி கமிஷனர் இந்திராவை சந்தித்த போது, ‘கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்துக்கொள்வதற்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்றால், தனக்கு ரூ.3 லட்சம் லஞ்சம் தர வேண்டும்’ என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    பிறகு இருவருக்கும் இடையே பேரம் பேசப்பட்டுள்ளது. இரண்டு லட்ச ரூபாயாவது தரவேண்டும் என இந்திரா கூற, இறுதியில் ரூ.1.5லட்சம் கொடுத்தால் மட்டுமே பரிந்துரை செய்யப்படும் என கூறியிருக்கிறார் இந்திரா. இது குறித்து சுரேஷ் குமார் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தல் படி, ரசாயனம் தடவிய ரூ.1.5லட்சத்தை இந்திராவிடம் சுரேஷ் வழங்க, அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்திராவை கையும், களவுமாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதமாற்ற வழக்கில் கைதான சங்கூர் பாபா… ரூ.40கோடி சொத்துக்கள் பறிமுதல்…
    Next Article ”தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.