தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வுப் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில், வேட்பாளர் ஆக விரும்பி விண்ணப்பித்த நிர்வாகிகளுடன் அவர் நேரிடையாக நேர்காணல் நடத்தி வருகிறார். முதற்கட்டமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த நேர்காணலில் பங்கேற்றனர். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக உரையாடி வரும் விஜய், தொகுதியின் நிலவரம் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்து வருகிறார்.

கட்சித் தரப்பில் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் தற்போது தீவிரப் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பின்னணி, சமூகப் பணிகள் மற்றும் மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். இந்தப் பரிசீலனைக்குப் பிறகு, தகுதியான நபர்கள் அடுத்தடுத்த கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் என்று கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். நேர்காணல் நடைமுறைகள் அனைத்தும் முடிந்த பிறகு, அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடுவார் எனத் தெரிகிறது.

இதற்கிடையில், விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.. இந்நிலையில் சங்கீதாவின் சொத்து விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வதில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதால் விஜயின் வேட்பு மனுவை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.. ஏனெனில், விஜய் பல சொத்துக்களை தனது மனைவியின் பெயரில் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version