Close Menu
    What's Hot

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்
    தமிழ்நாடு

    இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து தொடர்ந்து 3வது நாளாக போராட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 23, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    then protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பட்டாளம்மன்,ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. இந்த ஊரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து இத்தனை ஆண்டுகளாக திருவிழா கொண்டாடி வந்தனர்.

    திருவிழா நடைபெறும்போது குறிப்பிட்ட இரண்டு சமுதாய மக்களிடையே தொடர்ந்து பிரச்சனை எழுந்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்போது முதல் கோவில் திருவிழா நடத்தப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. மேலும் குடமுழுக்கும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்றும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தக் கோவிலில் கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை ஒப்புதல் அளித்தது.

    இந்த நிலையில் இந்தக் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்ட நிலையில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்களை அறங்காவலர் குழுவில் நியமிக்காமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்த சமுதாய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று முன்தினம் இந்த சமுதாய மக்கள் ஒன்றிணைந்து தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்த நிலையில்,நேற்று காலை முதல் கோவில் வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பெண்கள் உட்பட சுமார் 600க்கும் மேற்பட்டோர் நேற்று இரவும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் மீண்டும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    ஏற்கனவே இரண்டு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்பட்டதால் தான் இந்த கோவில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டதாக கூறும் தமிழக அரசு, தற்போது ஒரு தரப்பு மக்களை ஒதுக்கி வைத்து விட்டு அறங்காவலர் குழு அமைத்ததன் காரணமாக மோதல் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகவும், அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து அறங்காவலர் குழு அமைத்து உரிய முறையில் கும்பாபிஷேகம் நடத்துவதுடன்,கோவில் திருவிழாக்களையும் கோவில் பராமரிப்பு பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு மூன்று நாட்களாக பொதுமக்கள் போராடிவரும் நிலையில் இதுவரை அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது …

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article25 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்இரயில் பயணம்
    Next Article அணுகுண்டு பறவைகள் கூடு திரும்பட்டும்… போர் வேண்டாம் என வைரமுத்து கவிதை மன்றாடல்..
    Editor TN Talks

    Related Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    உச்சத்தில் உட்கட்சி பூசல்!. மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?. செல்வப்பெருந்தகை காட்டம்!

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் மு.க.ஸ்டாலின் தான்!. மணிசங்கர் அய்யர் கருத்து!.

    February 16, 2026

    நெருங்கும் தேர்தல்!. 10, +2 பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? அன்பில் மகேஷ் விளக்கம்!

    February 16, 2026

    அந்த வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது; மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்தார் நயினார்!

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.