வைர நகைக்கடை, தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட 30-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள்  நடத்திய சோதனையில் முக்​கிய ஆவணங்​கள் சிக்கின.

சென்னை தியாக​ராயநகர், பசுல்லா சாலை​யில் உள்ள பிரபல​மான தனி​யார் நிறு​வனம் ஒன்று ரசாயனங்​கள், நிலக்​கரி மற்​றும் சாம்​பல் கையாளுதல், உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதன் தொழிற்சாலை காஞ்சிபுரம்  மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல்  சோதனையில் ஈடுபட்டனர்.

குறிப்​பாக சென்​னை, நுங்​கம்​பாக்கம் வள்​ளுவர் கோட்​டம் சாலை​யில் உள்ள அலு​வல​கம், தி.நகர் பசுல்லா சாலை​யில் உள்ள தலைமை அலு​வல​கம், காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள தொழிற்​சாலை உள்​ளிட்ட இடங்​களில் 100-க்​கும் மேற்​பட்ட வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை மேற்​கொண்​டனர்.

அதில், பல்​வேறு முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் சொத்து பத்​திரங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. இதுகுறித்து வரு​மான வரி அதி​காரி​களிடம் கேட்​ட​போது, ‘கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள், சொத்து பத்​திரங்​கள், எவ்​வளவு வரி ஏய்ப்பு நடந்​துள்​ளது என்பன போன்ற விவரங்​கள் சோதனை முடிவடைந்த பின்​னர் வெளி​யிடப்​படும்​’ என்​றனர்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version