Close Menu
    What's Hot

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை ஒருமையில் பேசி அடித்து விரட்டிய இன்ஸ்பெக்டர்..
    தமிழ்நாடு

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை ஒருமையில் பேசி அடித்து விரட்டிய இன்ஸ்பெக்டர்..

    Editor TN TalksBy Editor TN TalksJune 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 14 181650
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.- போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது

    கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் இளம் பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், கைகலப்பும் ஏற்பட்டது.

    கரூர் அடுத்த வெண்ணைமலையை சேர்ந்த முருகராஜ் என்பவர் திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

    திருமணத்திற்கு பின் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், காவியா நேற்று மதியம் திடீரென வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இந்நிலையில் காவியாவின் உறவினர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து உறவினர்கள் வந்து சேர்வதற்குள் காவியா இறந்ததாக தகவல் சென்றுள்ளது. இதனை அடுத்து காவியாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஆனால், உறவினர்கள் வந்த பிறகும் காவியாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வராததால் காவியாவின் உறவினர்கள் சந்தேகமடைந்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி கரூர் – திருச்சி நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் கைகலப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவியாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்த பிறகு உறவினர்கள் உடற்கூறு ஆய்வு செய்யும் இடத்திற்கு வந்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் முத்துக்குமார், ஆண் பெண் என்று பாராமல் தாக்கியுள்ளார். மேலும் இளைஞர் ஒருவர் வீடியோ எடுப்பதை பார்த்து அவரது செல்போனை தட்டு விட்டு அவரைத் தாக்கினார் இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஹீரோவாக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்… இயக்குநர் யார்?
    Next Article ’ கத்தியை அங்க வைங்க’.. மேடையில் கோபப்பட்ட கமல்ஹாசன்.. நடந்தது என்ன?
    Editor TN Talks

    Related Posts

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025

    சமூகவலைதளங்களை பயன்படுத்த சிறுவர்களுக்குத் தடை! மத்திய அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

    December 26, 2025

    சுனாமி நினைவு தினம்: கடலோர மாவட்டங்களில் கண்ணீர் அஞ்சலி

    December 26, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    Trending Posts

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    December 27, 2025

    தேர்தல் அறிக்கை தயாரிக்க A.I. தொழில்நுட்பம்! திமுக புது வியூகம்

    December 26, 2025

    உத்தர பிரதேச அரசு பள்ளிகளில் செய்தித் தாள்கள் வாசிப்பது கட்டாயம்! தினமும் 10 நிமிடம் ஒதுக்கீடு

    December 26, 2025

    தட்கல் டிக்கெட்: மேலும் 5 ரயில்களில் ஓடிபி கட்டாயம்!

    December 26, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.