1993ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அதன் மூலம், மே 15 ஆம் தேதியை சர்வதேச குடும்பங்கள் தினமாக அறிவித்தது.  உலகெங்கிலும் உள்ள மக்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், சமூக முன்னேற்றத்தை அதிகரிக்கவும் சர்வதேச குடும்ப தினம் கடைப் பிடிக்கப்படுகிறது.

 

சுகாதாரம், கல்வி, குழந்தைகளின்உரிமைகள், பாலினசமத்துவம், சமநிலைமற்றும்சமூகஉள்ளடக்கல்போன்றஉலகெங்கிலும்உள்ளமக்களைப்பாதிக்கும்சிலமுக்கியத்தலைப்புகளில்கவனம்செலுத்துவதேஇந்நாளின்பின்னணியில்உள்ளயோசனையாகும்.

 

சர்வதேச குடும்பங்கள் தினமான இன்று உலக நாடுகளின் தலைவர்களும், இந்தியாவில் அரசியல் கட்சியினரும் தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து பதிந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரும், தனது குடும்பத்தினருடன் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் வேர்கள் உறுதியானால், தலைமுறைகள் உயர்ந்து நிற்கும். குடும்பத்தின் ஒற்றுமை,தலைமுறையின் பெருமை, குடும்ப தின நல்வாழ்த்துக்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version