தஞ்சை அருகே அய்யாச்சாமிபட்டி பிரிவு சாலை பகுதியில் நடைபெறும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், ஜனநாயகன் பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக மவுனம் கலைத்து பேசினார்.  அப்போது கரூர் விவகாரம் முதல் ஜனநாயகன் வரை தன் மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகன் ரிலீஸ் பிரச்சனையில் தனக்காக ஆதரவு குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், மீனவர்கள் கைது செய்யப்பட்டால் பிரதமர் மோடி கடிதம் கொடுத்துவிட்டு மீண்டும் தூங்க சென்றுவிடுவார் ஸ்டாலின் என விஜய் கிண்டலடித்துள்ளார். மீனவர்கள் விவகாரத்தில் மானே, தேனே, பொன்மானே என கடிதம் எழுதாமல் உணர்வுப்பூர்வமான நடவடிக்கை தேவை என்ற அவர், தான் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் மீது கைவைக்கவே முடியாது எனவும் உறுதியளித்துள்ளார். மேலும் திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் கூறினார்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version