தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் முடிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
தங்கள் கட்சிக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு தொண்டர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.
கட்சியின் தலைமை அலுவலகங்களிலும், கிளைஅலுவலகங்களிலும், ஒன்று கூடியுள்ளனர்.
அதிதீவிர தொண்டர்கள் காலைமுதலே பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் குழுமியுள்ள தொண்டர்களில் சீனியர் ஒருவர் அங்குள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு மறைந்தும் மறையாத இந்த தலைவர்கள் அருள்புரிய வேண்டும் என வேண்டிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார் அந்த சீனியர் தொண்டர்.
