Close Menu
    What's Hot

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.1 லட்சத்திற்காக 9 துண்டுகளாக வெட்டப்பட்ட நபர்…
    தமிழ்நாடு

    ரூ.1 லட்சத்திற்காக 9 துண்டுகளாக வெட்டப்பட்ட நபர்…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை எனவும் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது என தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
    புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழக அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு இதுவரை துவங்கவில்லை எனக் கூறி, கோவையைச் சேர்ந்த மறுமலர்ச்சி இயக்கம் என்ற அமைப்பின் நிர்வாகி வே.ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்த விவரங்களை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால், 25 சதவீத ஏழை மாணவர்கள் இட ஒதுக்கீட்டுக்கான கல்விக் கட்டண தொகை ஒதுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் பல மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் கையெழுத்திடவில்லை எனவும் குறிப்பிட்டார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசு பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது என தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், 25 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக மே 28 ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒரு லட்சம் ரூபாய் பணத்துக்காக தனியார் நிறுவன காவலாளியை கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி கால்வாயில் வீசிய வழக்கில் கடலூரைச் சேர்ந்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    சென்னை துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்த வெங்கட்ராவ் என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா பாசிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன்.

    இதை உண்மை என நம்பிய வெங்கட்ராவ், தனது சகோதரியின் நகையை வங்கியில் அடகு வைத்து ஒரு லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்துள்ளார். சிந்தாதிரிப்பேட்டையில் விடுதியில் தங்கியிருந்த வேல்முருகனை சந்திக்கச் சென்றார்.

    அங்கு பணத்தை பெற்றுக் கொண்ட வேல்முருகன், வெங்கட்ராவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து, உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டி பாலிதீன் பைகளில் போட்டு எடுத்து சென்று, பாசிக்குளம் கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள கள்ளங்குத்து வெள்ளாற்றங்கரை ஓடையில் வீசியுள்ளார்.

    மனித உடலின் பாகங்கள் தனித்தனியாக கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததை அடுத்து விருதாச்சலம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் காவலாளி வெங்கட்ராவை, வேல்முருகன் கொலை செய்து பாசிக்குளம் ஓடையில் வீசி சென்றது தெரியவந்தது.

    கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், வேல்முருகன் மீதான கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஆயுள்தண்டனையும், 18 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்… சி.பி.ஐ. விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்…
    Next Article என்னை துரோகி என்பதா? மல்லை சத்யா வேதனை..
    Editor TN Talks

    Related Posts

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025

    “புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி”!. தவெக தலைவர் விஜய்!

    December 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    Trending Posts

    நயினார் நாகேந்திரனுக்கு கறுப்பு கொடி காட்டிய பெண் : திடீரென மயங்கியதால் பரபரப்பு

    December 28, 2025

    தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு

    December 28, 2025

    காங்கிரஸ் வெறும் கட்சியல்ல ; ஆன்மாவின் குரல் : சொல்கிறார் ராகுல்

    December 28, 2025

    இலங்கை சிறையில் இருந்து 62 மீனவர்களை விடுவிக்க மத்திய அரசின் நடவடிக்கை தேவை: முதல்வர் ஸ்டாலின்

    December 28, 2025

    பல் மருத்துவர்கள் உண்ணாநிலைப் போராட்டம்! காங்கிரஸ் கட்சி ஆதரவு

    December 28, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.