திண்டுக்கல் நகரில் அமைந்துள்ள மேட்டுராஜகாபட்டி காளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடைபெறும் பெருந்திருவிழா, இந்த ஆண்டும் கடந்த மே 20, 2025 அன்று சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

விழாவின் முதல் நாளில், 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் பெண்களும் கலந்துகொண்ட பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று, பூஞ்சோலையிலிருந்து இரண்டடி முதல் 16 அடி வரை அழகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் மேளதாளங்கள் முழங்க, 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி ஆடி ஊர்வலமாக வந்தனர்.

பின்னர், கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களும் குழந்தைகளும் இறங்கி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

வருகிற மே 29, 2025 அன்று கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் வைகாசி திருவிழா இனிதே நிறைவடைகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version