Close Menu
    What's Hot

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொலை செய்துவிட்டு 21 ஆண்டுகளாக தலைமறைவு; எஸ்ஐஆர் விண்ணப்பம் மூலம் தட்டி தூக்கிய தனிப்படை
    தமிழ்நாடு

    கொலை செய்துவிட்டு 21 ஆண்டுகளாக தலைமறைவு; எஸ்ஐஆர் விண்ணப்பம் மூலம் தட்டி தூக்கிய தனிப்படை

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    plcc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலையாளி, எஸ்ஐஆர் பணி மூலமாக அடையாளம் காணப்பட்டு கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை, எண்ணூர் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு தாஜூதீன் என்பவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக எண்ணூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கொலையாளியின் பெயர் தவிர எந்தவித அடையாளமும் தெரியாததால் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

    இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆவடி மாநகர காவல்துறை ஆணையாளர் சங்கர், ஆவடி சரகத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் கைது செய்யப்படாமல் இருக்கும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டார்.

    காவல்துறை ஆணையாளர் உத்தரவை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தாஜூதீன் கொலை வழக்கை விசாரணைக்கு எடுத்தனர்.

    முதற்கட்டமாக, கொலையாளியின் பெயர் ராஜேந்திரன், அவருடைய தந்தை பெயர் பரமசிவம் மற்றும் கடலூரை சேர்ந்தவர் என்ற தகவலுடன் விசாரணை துவங்கியது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக புகார் அளித்த எண்ணூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மரியம் பீவி என்ற பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கொலையாளிக்கு ராஜேந்திரன் என்ற பெயர் மட்டுமல்லாமல், ரஃபீக் என்ற பெயர் இருந்ததும், அவர் எண்ணூர் பகுதியில் ரசூல் பீவி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு தலைமறைவானதும் தெரிய வந்தது.

    கொலையாளி குறித்து எந்த துப்பும் கிடைக்காத நிலையில், விசாரணை பாதையை மாற்றிய தனிப்படை போலீசார் ஏற்கனவே கிடைத்த தகவலை தொடர்ந்து கடலூருக்கு விரைந்தனர். தொடர்ந்து போலீசார் அங்குள்ள வாக்காளர்களின் விவரங்களில் கொலையாளியை தேடினர். அதில் 5 முதல் 6 நபர்களின் விபரங்கள் ஒத்துப்போன நிலையில் அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது கொலையாளியோடு ஒத்துப்போகாத நபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், திட்டக்குடி பகுதியில் இருந்த ராஜேந்திரன் என்பவரோடு கொலையாளியின் விவரங்கள் ஒத்துப்போனது.

    இதனை உறுதி செய்வதற்காக தனிப்படை போலீசார் எஸ்ஐஆர் படிவம் சரிபார்க்கும் பிஎல்ஓ அதிகாரிகள் போல மாறுவேடமிட்டு, ராஜேந்திரனின் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது, அவருடைய புகைப்படத்தை கைப்பற்றினர். மேலும் அந்த நபர் வீட்டில் எப்போதும் தங்காமல், நாடோடியாக சாம்பிராணி புகை போடும் வேலை பார்த்து வந்ததும், மேலும் அவர் ஜெயங்கொண்டம், வேலூர், பெரம்பலூர் பகுதிகளில் வேலைபார்த்து விட்டு அங்குள்ள பேருந்து நிலையங்களில் தங்கி வந்ததும் தெரிய வந்தது.

    உடனடியாக அந்த பகுதிகளில் இருந்த பேருந்து நிலையங்களில் 15 நாட்களாக தனிப்படை போலீசார் தங்கியிருந்து கொலையாளியை தேடி வந்தனர். ஆனால் அவரை குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ராஜேந்திரன் குடும்பத்தினரின் செல்போன் எண்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேந்திரன் தன்னுடைய மகனை செல்போனில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. உடனடியாக அழைப்பு வந்த அந்த எண்ணை சோதனை செய்ததில், அந்த அழைப்பு பெங்களூருவில் இருந்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக பெங்களூருவுக்கு விரைந்த தனிப்படை போலீசார், அங்கிருந்த ராஜேந்திரனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு ராஜேந்திரன் வாக்குமூலம் அளித்தார். அதில், கொலை செய்யப்பட்ட தாஜூதீனுக்கும், ராஜேந்திரனின் அண்ணனுக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக தட்டி கேட்க சென்ற ராஜேந்திரனை தாஜூதீன் திமராக பேசியதாகவும், அதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் தாஜூதீனின் கழுத்தை அறுத்துக்கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், கொலை செய்யப்பட்ட தாஜூதீனின் உடலை வீட்டிலேயே போட்டுவிட்டு, சென்னை எண்ணூரில் இருந்து தலைமறைவான ராஜேந்திரன் ஊரு ஊராக சுற்றி சாம்பிராணி போடும் வேலை செய்து வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனை அடுத்து ராஜேந்திரனை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கொலையாளியை பிடித்த தனிப்படை போலீசாரை காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவனப்பகுதியில் விடப்பட்ட ‘ரோலக்ஸ்’ யானை உயிரிழப்பு
    Next Article தேமுதிக இடம்பெறும் கூட்டணியே வெற்றி பெறும்: பிரேமலதா நம்பிக்கை
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    பாஜகவின் சிட்டிங் தொகுதிகளுக்கு குறி! திமுக அமைக்கும் வியூகம்!!

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் எப்போது?. சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!. 

    Trending Posts

    மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி; எரிசக்தித்துறைக்கு ரூ.18,301 கோடி ஒதுக்கீடு!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    அதிமுகவில் இணைந்தார் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸ்!

    February 17, 2026

    ஜிஎஸ்டியால் நடப்பாண்டில் ரூ.9,600 கோடி இழப்பு ஏற்படும்!. தங்கம் தென்னரசு!

    February 17, 2026

    காங்கிரஸ் தலைவராக ஈராண்டுகள் நிறைவு..! செல்வப்பெருந்தகை செய்தது என்ன?

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.