Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»நாகை மாவட்டத்தில் மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்
    தமிழ்நாடு

    நாகை மாவட்டத்தில் மழைநீர் வடியாததால் 2,000 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 15, 2025Updated:December 15, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    nagai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கனமழை ஓய்ந்து 10 நாட்​களுக்கு மேலாகி​யும் நாகை மாவட்​டத்​தில் வயலில் தேங்​கிய மழைநீர் வடி​யாத​தால் 2,000 ஏக்​கரில் பயி​ரிடப்​பட்​டிருந்த நெற்​ப​யிர்​கள் முற்​றி​லும் அழுகி சேதமடைந்​துள்​ளன.

    நாகை மாவட்​டத்​தில் 1.62 லட்​சம் ஏக்​கருக்​கும் அதி​க​மான பரப்​பில் சம்​பா, தாளடி நெற்​ப​யிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்​டிருந்​தன. இந்​நிலை​யில், வடகிழக்கு பரு​வ​மழை தீவிரமடைந்​த​தா​லும், வங்​கக் கடலில் உரு​வான டிட்வா புயல் காரண​மாக​வும் டெல்டா மாவட்​டங்​களில் அதி​க​ன மழை பெய்​தது.

    இதனால், நாகை மாவட்​டத்​தில் உள்ள விளைநிலங்​கள் முழு​வதும் மழைநீர் சூழ்ந்து கடல்​போலக் காட்​சி​யளித்​தன. குறிப்​பாக, 40 முதல் 60 நாட்​களான சம்பா பயிர்​களும், 20 முதல் 30 நாட்​களான தாளடி பயிர்​களும் முற்​றி​லும் மழைநீரில் மூழ்​கின.

    மழை நின்ற பிறகு வயலில் தேங்​கிய மழைநீரை வடிய​வைக்​கும் பணி​யில் விவ​சா​யிகள் ஈடு​பட்​டனர். ஆனால், கனமழை ஓய்ந்து 10 நாட்​களுக்கு மேலாகி​யும் கீழையூர் வட்​டாரத்​துக்கு உட்​பட்ட கீழப்​பி​டாகை, காரப்​பி​டாகை, மகிழி, கருங்​கண்​ணி, திரு​மணங்​குடி, ஈசனூர் உள்​ளிட்ட பகு​தி​களில் 2,000 ஏக்​கர் பரப்​பில் சம்பா மற்​றும் தாளடி பயிர்​கள் சாகுபடி செய்​யப்​பட்ட வயல்​களில் மழைநீர் வடிய​வில்​லை.

    விளை நிலங்​கள் முழு​வதும் தண்​ணீர் நிறைந்​துள்​ள​தால் பயிர்​கள் முற்​றி​லும் அழுகி சேதமடைந்​துள்​ளன. இதுகுறித்து அப்​பகுதி விவ​சா​யிகள் கூறிய​தாவது: வாய்க்​கால்​களை தூர் வாராத​தா​லும், ஆகா​யத்​தாமரை அதிக அளவில் மண்​டி​யுள்​ள​தா​லும் வயல்​களில் தேங்​கிய நீர் வடிய​வில்​லை. இதனால் 2,000 ஏக்​கரில் பயி​ரிடப்​பட்ட பயிர்​கள் அழுகி சேத​மாகி​விட்​டன.

    இதுவரை பயிர் பாதிப்பு குறித்து அதி​காரி​கள் யாரும் ஆய்வு செய்​ய​வில்​லை. ஏக்​கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்​துள்ள நிலை​யில், அவை முற்​றி​லும் அழுகிய​தால், மீண்​டும் மறு நடவு செய்​யக்​கூடிய சூழல் ஏற்​பட்​டுள்ளது. தண்​ணீர் வடிவதற்கு மேலும் 10 நாட்​களுக்கு மேலாகும் என்​ப​தால், விவ​சா​யத்​தைக் கைவிடக்​கூடிய சூழல் ஏற்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள்… ஹர்திக் பாண்டியா அசத்தல்
    Next Article கடல் அரிப்பு: திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு பள்ளம்
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.