இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடப்பாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக தேசிய தேர்வு முகமையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
நீட் மதிப்பெண்களில் முறைகேடு செய்து, “குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற பணக் காரணங்களை கருத்தில் கொள்ளாமல்” உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் மற்றும் NTA (தேசிய தேர்வு நிறுவனம்) அதிகாரிகள் மீது CBI வழக்குப் பதிவு செய்துள்ளது.
NEET UG மதிப்பெண்களில் முறைகேடு செய்த 90 லட்சம் பேருக்கு, பணம் செலுத்தினால், முறைகேடு செய்யப்பட்ட மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கப்படும். குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவரை தேடிவருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் ”நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது.
நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் – முதல் கோணல் முற்றிலும் கோணல்! RSS – BJP மாநாடுகளில் showpiece-ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.